மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
தேசிய கண்ணொளி விழிப்புணர்வு இயக்கம் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
விபத்தில் சிக்கி மூளைச்சாவு ஏற்படுபவர்களது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவர்களது உறவினர்கள் முன் வருவது தற்போது அதிகரித்துள்ளது. எனினும், உறுப்புகளை உரிய நேரத்தில் பயன்படுத்த இயலாமல் தடுக்கும் வகையில் சட்ட நடவடிக்கைகள் ஏராளமாக உள்ளன.
எனவே, உடல் உறுப்பு தானத்துக்கு உள்ள சட்ட நடவடிக்கைகளை தளர்த்த வேண்டும் என்று ஏராளமானோர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து உடல் உறுப்புகளை தானம் கொடுப்பதில் உள்ள மருத்துவம் சார்ந்த சட்ட நடவடிக்கைகளில் நடைமுறைகளை தளர்த்தி, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் சாலை விபத்துகளில் உயிரிழப்போர் ஏராளம். இதில் தலையில் அடிபட்டு அதனால் மூளைச்சாவு ஏற்படுபவர்களும் ஏராளம். மூளைச் சாவு என்பது, உடல் உறுப்புகள் இயங்கிக் கொண்டிருக்க, அவர்களது மூளை செயலிழந்து, உயிர் வாழ வாய்ப்பே இல்லை என்ற நிலையில், அவர்களது உறவினர்கள், பாதிக்கப்பட்டவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வருகின்றனர்.
வணக்கம்.
தேசிய கண்ணொளி விழிப்புணர்வு இயக்கம் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
விபத்தில் சிக்கி மூளைச்சாவு ஏற்படுபவர்களது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவர்களது உறவினர்கள் முன் வருவது தற்போது அதிகரித்துள்ளது. எனினும், உறுப்புகளை உரிய நேரத்தில் பயன்படுத்த இயலாமல் தடுக்கும் வகையில் சட்ட நடவடிக்கைகள் ஏராளமாக உள்ளன.
எனவே, உடல் உறுப்பு தானத்துக்கு உள்ள சட்ட நடவடிக்கைகளை தளர்த்த வேண்டும் என்று ஏராளமானோர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து உடல் உறுப்புகளை தானம் கொடுப்பதில் உள்ள மருத்துவம் சார்ந்த சட்ட நடவடிக்கைகளில் நடைமுறைகளை தளர்த்தி, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் சாலை விபத்துகளில் உயிரிழப்போர் ஏராளம். இதில் தலையில் அடிபட்டு அதனால் மூளைச்சாவு ஏற்படுபவர்களும் ஏராளம். மூளைச் சாவு என்பது, உடல் உறுப்புகள் இயங்கிக் கொண்டிருக்க, அவர்களது மூளை செயலிழந்து, உயிர் வாழ வாய்ப்பே இல்லை என்ற நிலையில், அவர்களது உறவினர்கள், பாதிக்கப்பட்டவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வருகின்றனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக