ஞாயிறு, 29 ஜூன், 2014

கண்கள் பாடல்கள் -04

மரியாதைக்குரியவர்களே,
             வணக்கம். இதோ உங்களுக்காக திரைப்படப்பாடல்கள் தொடர்ச்சி .....

கண்களால் நான் வரைந்தேன்

படம்: மங்கள நாயகி
பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ், பி.சுசீலா
இசை: வி.குமார்


ஜேசுதாஸ்:
கண்களால் நான் வரைந்தேன்
அன்பெனும் ஓர் கவிதை
தேன் மலர் மறப்பதுண்டோ
தென்றலே உன் நினைவை

கண்களால் நான் வரைதேண்
அன்பெனும் ஓர் கவிதை
தேன் மலர் மறப்பதுண்டோ
தென்றலே உன் நினைவை

மார்கழி மாதம் என்றால்
ஆஆஆஆஆஆ ..
மார்கழி மாதம் என்றால்
போர்வை போல் நானிருக்க
சித்திரை மாதம் என்றால்
வாடை போல் நீயிருக்க
நான் சூடும் மாலைகள் நீ கொண்ட கைகள்
நெய் கொண்ட தீபங்கள் மை கொண்ட கண்கள்
பூவும் பொட்டும் மேவும் பெண்மை
பூவைப் போலே நாளும் மென்மை

கண்களால் நான் வரைதேண்
அன்பெனும் ஓர் கவிதை
தேன் மலர் மறப்பதுண்டோ
தென்றலே உன் நினைவை

உன் நலம் நினைப்பதெல்லாம் என் நலம் நானறியேன்
உன்னை நான் வாழ வைக்க என்னையே நான் கொடுப்பேன்
சொந்தங்கள் பந்தங்கள் உண்டான பின்பு
மென்மேலும் வளர்கின்ற நிலவாகும் அன்பு
உன்னைப் பாடும் எந்தன் உள்ளம்
என்றும் பொங்கும் கங்கை வெள்ளம்

சுசீலா:
கண்களால் நான் வரைந்தேன்
அன்பெனும் ஓர் கவிதை
தேன் மலர் மறப்பதுண்டோ
தென்றலே உன் நினைவை

காலங்கள் கனியும் வரை கன்னி நான் காத்திருப்பேன்
கண்னனின் வரவுக்கென்றே கண் மலர் பூத்திருப்பேன்
கல்யாண வைபோகம் ஊர்கோலம் யாவும்
நன் நாளில் உன்னோடு நான் காண வேண்டும்
எண்ணம் எல்லாம் கண்ணில் மின்ன
சொல்லில் சொல்ல மிச்சம் என்ன

ஜேசுதாஸ்:
கண்களால் நான் வரைதேண்
அன்பெனும் ஓர் கவிதை
சுசீலா: தேன் மலர் மறப்பதுண்டோ
தென்றலே உன் நினைவை 

------------------------------------------------------------
 

கண் போன போக்கிலே கால் போகலாமா?

படம்: பணம் படைத்தவன்
பாடியவர்: T.M. சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன், ராமமூர்த்தி

கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?
கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா
?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?

கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?


நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்

கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?


பொய்யான சில பேர்க்குப் புது நாகரீகம்
புரியாத பல பேர்க்கு இது நாகரீகம்
முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்

கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?


திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்?
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்?
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்

கால் போன போக்கிலே மனம் போகலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?

-------------------------------------------------------------------------------------------
 

என்ன பார்வை உந்தன் பார்வை

படம் : காதலிக்க நேரமில்லை
குரல் : ஜேசுதாஸ், சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : வி.ரா
நடிகர்கள் : முத்துராமன், காஞ்சனா


என்ன பார்வை உந்தன் பார்வை
இடை மெலிந்தாள் இந்தப் பாவை
மெல்ல மெல்ல பக்கம் வந்து
தொட்ட சுகம் அம்மம்மா....ஆ..


என்ன பார்வை உந்தன் பார்வை
எனை மறந்தேன் இந்த வேளை
வண்ண வண்ணச் சேலை தொட்டுக்
கண்ட சுகம் அம்மம்மா....ஆ...

தேன் கொண்டு வந்த முல்லை மொட்டு
பூஞ்சிட்டு உன் சொந்தமல்லவா
சின்னச் சின்ன நெஞ்சில் உன்னை
எண்ண எண்ண அம்மம்மா... ஹோய்..

கன்னங்கள் என்னும் தங்கத் தட்டு
கை பட்டு சின்னங்கள் கொண்டதோ
சொல்லச் சொல்ல உள்ளம் துள்ளும்
இன்பம் என்ன சொல்லம்மா... ஹோய்

( என்ன )

மை கொண்ட கண்கள் மெல்ல மூடும்
பண்பாடும் எண்ணங்கள் கொஞ்சமோ
பிஞ்சுத் தென்றல் நெஞ்சைத் தொட்டுக்
கொஞ்சக் கொஞ்ச அம்மம்மா...ஹோ

ஆகட்டும் என்ற பின்னும் அச்சம்
ஏன் மிச்சம் கண்ணல்ல ஓடி வா
அக்கம்பக்கம் யாரும் இல்லை
வெட்கம் என்ன சொல்லம்மா.. ஹோ..

( என்ன )

-----------------------------------------------------
 

என் வேதனையில் உன் கண்ணிரண்டும்

இசை: வேதா
நடிகை: ஜெயலலிதா
படம்: யார் நீ
வருடம்: 1966
பாடல்: கவியரசு கண்ணதாசன்
குரல்: பி. சுசீலா


என் வேதனையில் உன் கண்ணிரண்டும்
என்னோடு அழுவதேன் கண்ணா?
உலகமே மாறி மாறி பார்க்கும்
போது மயக்கமேன் கண்ணா?
ஒருவரே வேறு பார்வை பார்க்கும் போது
அழுவதேன் கண்ணா?

நேற்று வந்தேன் இன்று வந்தேன்
உன்னிடம் நாளை நான் வருவேன்
ஒரே நாளில் இங்கும் அங்கும்
உன் முகம் காண நான் வருவேன்
உன் பாதையிலே உன் பார்வையிலே
என் மேனி வலம் வரும் கண்ணா

என் வேதனையில் உன் கண்ணிரண்டும்
என்னோடு அழுவதேன் கண்ணா?

துன்ப மழையில் நின்ற போது
கண்களில் உன்னை நான் கண்டேன்
அதே வழியில் அதே மழையில்
என் வாழ்வை காண செல்கின்றேன்

என் வேதனையில் உன் கண்ணிரண்டும்
என்னோடு அழுவதேன் கண்ணா?
ஒருவரே வேறு பார்வை பார்க்கும் போது
அழுவதேன் கண்ணா?

கால தேவன் வாசல் வழியே
போகிறேன் இன்று நீ யாரோ
போகும் வழியில் அன்பு முகத்தை
பார்க்கிறேன் நாளை நான் யாரோ
உன் மாளிகையில் என் நினைவிருந்தால் என்
நெஞ்சை மன்னிப்பாய் கண்ணா

என் வேதனையில் உன் கண்ணிரண்டும்
என்னோடு அழுவதேன் கண்ணா? 

-------------------------------------------------------------------
 

என் கண்மணி உன் காதலி

படம்: சிட்டு குருவி
பாடல்: என் கண்மணி
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்பிரமணியன், பி. சுசீலா
இசை: இளையராஜா

ஆண்: என் கண்மணி.. உன் காதலி.. இளமாங்கனி,
உனைபார்ததும் சிரிக்கின்றதே..சிரிக்கின்றதே
நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ
நீ நகைச்சுவை மன்னனில்லையோ

பயணி: நன்னா சொன்னேள் போங்கோ..

பெண்: என் மன்னவன்.. உன் காதலன்
எனை பர்த்ததும்.. ஓராயிரம்..
கதை சொல்கிறான்.. கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ

ஆண்: என் கண்மணி

ஆண்: இரு மான்கள் பேசும் போது மொழி ஏதம்மா
பிறர் காதில் கேட்பதற்க்கும் வழி ஏதம்மா

பெண்: ஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில்
உறவன்றி வேறு இல்லை கவனங்களில்

ஆண்: இளமாமயில்..

பெண்: அருகாமையில்..

ஆண்: வந்தாடும் வேளை இன்பம் கோடி என்று,
அனுபவம் சொல்லவில்லையோ

கண்டக்டர்: இந்தாம்மா கருவாட்டு கூடை முன்னாடி போ

பெண்: என் மன்னவன்..உன் காதலன்
எனை பர்த்ததும் ஓராயிரம்
கதை சொல்கிறான்.. கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ

ஆண்: என் கண்மணி..

கண்டக்டர்: தேனாம்பேட்டை சூப்பர்மாக்கெட் எறங்கு..

ஆண்: மெதுவாக உன்னை கொஞ்சம் தொடவேண்டுமே
திருமேனி எங்கும் விரல்கள் படவேண்டுமே

பெண்: அதற்காக நேரம் ஒன்று வரவேண்டுமே
அடையாள சின்னம் அன்று தரவேண்டுமே

ஆண்: இரு தோளிலும்.. மண்மாலைகள்

பெண்: கொண்டாடும் காலம் என்று கூடுமென்று
தவிக்கின்ற தவிப்பென்னவோ

ஆண்: என் கண்மணி, உன் காதலி, இளமாங்கனி,
உனைபார்ததும் சிரிக்கின்றதே..சிறிக்கின்றதே
நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ
நீ நகைச்சுவை மன்னனில்லையோ

பெண்: என் மன்னவன், உன் காதலன்
எனை பர்த்ததும் ஓராயிரம் கதை சொல்கிறான்..
கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்க தூன்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ
ஆண்: என் கண்மணி

என் கண்மணி.. உன் காதலி
இள மாங்கனி...எனைப் பார்த்ததும்..
சிரிக்கின்றதே.. சிரிக்கின்றதே
நான் சொன்ன ஜோக்கைக் கேட்டு நாணமோ
நீ நகைச்சுவை மன்னன் இல்லையோ

..... நன்னா சொன்னேள் போங்கோ..

என் மன்னவன்.. உன் காதலன்
எனைப் பார்த்ததும்..ஓராயிரம்..
கதை சொல்கிறான்.. கதை சொல்கிறான்
அம்மம்மா.. இன்னும் கேட்கத் தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ

(என் கண்மணி)

இரு மான்கள் பேசும்போது மொழி ஏதம்மா
பிறர் காதில் கேட்பதற்கும் வழி ஏதம்மா
ஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில்
உறவன்றி வேறு இல்லை கவனங்களில்
இளமாமயில்.. அருகாமையில்
வந்தாடும் காலம் என்று கூடும் என்று
அனுபவம் சொல்வதில்லையோ..

... இந்தம்மா கருவாட்டுக் கூடை.. முன்னாடி போ..

(என் மன்னவன்)

.. தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட் இறங்கு...

மெதுவாக உன்னைக் கொஞ்சம் தொட வேண்டுமே
திருமேனி எங்கும் விரல்கள் பட வேண்டுமே
அதற்காக நேரம் ஒன்று வர வேண்டுமே
அடையாளச் சின்னம் ஒன்று தர வேண்டுமே
இரு தோளிலும் மண மாலைகள்
வந்தாடும் நேரம் என்று கூடும் என்று
தவிக்கின்ற தவிப்பென்னவோ

(என் கண்மணி)

---------------------------------------------------------------------------------------
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக