மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.சிபர்ஸ்கண்கள் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
ஆரோக்கியம் தரும் கண் பயிற்சிகள்
பயிற்சி - 1
ரப்பர்
பந்தை ஒரு கையில் எடுத்து தரையில் V போன்று போட்டு பின்பு மறுகையால்
பிடிக்க வேண்டும். ஒரு கையில் பந்தை பிடிக்க வேண்டும் பின்பு பந்தை பார்க்க
வேண்டும். பின் அந்த பந்தை பார்த்து இமைக்க வேண்டும். பின்னர் அந்த பந்தை
மறு கைக்கு மாற்றும் போது பார்வை அந்த பந்தை நோக்கி மட்டுமே இருக்க
வேண்டும். இவ்வாறு மாறி மாறி செய்ய வேண்டும். 20 முதல் 25 முறை வரை இவ்வாறு
செய்ய வேண்டும்
பயன்கள் :
இதனால்
கண்களுக்கு நல்ல ரத்த ஓட்டம் கிடைக்கிறது. மேலும் கண் நரம்புகளுக்கு நல்ல
பயிற்சி கிடைக்கிறது. பார்வை தெளிவு பெறுகிறது. இதனால் கண்களுக்கு நல்ல
ஓய்வும் கிடைக்கும்
பயிற்சி - 2
ஒரு
மெழுகுவர்த்தி கொழுத்தி வைக்கவும். அந்த மெழுகுவர்த்தி ஒளியில் இருந்து
எவ்வளவு தூரத்தில் இருந்தால் சரியாகப் படிக்க இயலுமோ அந்தத் தொலைவில் சிறிய
அச்சு உள்ள எழுத்துக்களை ஒவ்வொரு வரிசையாக பொறுமையாக படிக்க வேண்டும்.
ஒவ்வொரு வரியும் படித்த பின்னர் இடையில் உள்ள வெண்மையான பகுதியைப் பார்த்து
கண்களை இமைத்தல் வேண்டும். நான்கு முதல் ஐந்து நிமிடம் படிக்க வேண்டும்.
பயன்கள் :
இவ்வாறு செய்வதால் கண் பார்வை தெளிவடையும். மேலும் கிட்டப்பார்வை படிப்படியாக நிவர்த்தியாவதை காணலாம்.
பயிற்சி - 3
செங்குத்தான
இடைவெளிகளைக் கொண்ட கம்பி ஜன்னல் முன்னால் கால்களை 1 அடி இடைவெளியில்
அகற்றி வைத்து நிற்கவும். பக்கவாட்டில் மிக மெதுவாக கடிகார பெண்டுலம் போல்
இருந்த இடத்தை விட்டு நகராமல் மெதுவாக கண்களை அசைதல் வேண்டும்.
இப்பயிற்சியின் போது கம்பிகளின் ஊடே முன்புறம் உள்ளவற்றைப் கண்களால்
பார்க்க வேண்டும். ஒரு முனையில் அசைய ஆரம்பிக்கும் போதும், மறு முனையில்
முடிக்கும் போதும் கண்களை இமைத்தல் வேண்டும். 20 முதல் 25 எண்ணிக்கைகள் வரை
மிகவும் மெதுவாக அசைக்க வேண்டும்.
பயன்:
இப்படி செய்வதால் கண்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.மேலும் கண்களின் களைப்பு நீங்கும்.
பயிற்சி - 4
இடது
விரல்களின் மீது வலது கைவிரல்களைக் குறுக்காக வைக்கவும். பின் இரு
உள்ளங்கைகளையும் சற்று குழியாக்கி கொள்ளவும். பின் மூடிய கண் இமைகளின் மேல்
இவ்விரு குழிந்த உள்ளங்கையின் பகுதியை மெதுவாக பட்டும் படாதவாறு
அழுத்தாமல் மிகவும் கவனமாக வைக்கவும். இந்த பயிற்சியை எந்த நேரமும், நேரம்
கிடைக்கும் பொழுது எல்லாம் செய்யலாம்.
பயன்கள் :
கண் சோர்வு நீக்கும். கண் பார்வை தெளிவு பெறும். கண்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன
பயிற்சி - 6
கண்களை
மூடிக் கொண்டு கைகளில் நீரை எடுத்து மிக மெதுவாகக் கண் மற்றும் முகத்தில்
நீரை தெளித்துக் கழுவ வேண்டும். இப்படி தினமும் குறைந்தது எட்டு அல்லது
பத்து முறை கண்களைக் கழுவ வேண்டும். கழுவிய பின்பு துணி கொண்டு கண்களை
துடைக்காமல் அப்படியே காற்றில் உலர விடுதல் மிகுந்த நலம் தரும்.
பயன்:
சூடு
தணிகிறது. கண் தசைகள் மற்றும் நரம்புகளில் கழிவு இரத்தம் வெளியேறி புது
இரத்தம் கிடைக்கிறது. மேலும் கண்கள் குளிர்ச்சி அடைகின்றன. கண்களுக்கு
புத்துணர்ச்சி கிடைக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக