ஞாயிறு, 29 ஜூன், 2014

கண்கள் பாடல்கள்-03

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். திரைப்படப் பாடல்கள் தொடர்ச்சி...........

கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே

படம்:கர்ணன்
பாடியவர்: பீ.சுசீலா
இசை: எம். எஸ்.விஸ்வனாதன் -T.K.ராமமூர்த்தி
வரிகள்: கண்ணதாசன்
நடிகை: தேவிகா


ஒலிவடிவில்

கண்கள் எங்கே
நெஞ்சமும் எங்கே
கண்டபோதே சென்றன அங்கே

கண்கள் எங்கே
நெஞ்சமும் எங்கே
கண்டபோதே சென்றன அங்கே

கால்கள் இங்கே நெளியும் இங்கே
கால்கள் இங்கே நெளியும் இங்கே
காவலின்றி வந்தன இங்கே ஆஆஆ...

குழுவினர்:
ஆஆஆஆஆ

சுசீலா:
கண்கள் எங்கே
நெஞ்சமும் எங்கே
கண்டபோதே சென்றன அங்கே

குழுவினர்:
ஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஅ
ஆஆஆஆஆஆஅ

சுசீலா:
மணி கொண்ட கரமொன்று
அனல் கொண்டு வெடிக்கும்
அனல் கொண்டு வெடிக்கும்

குழுவினர்:
ஆஆஆஆஆ

சுசீலா:
மணி கொண்ட கரமொன்று
அனல் கொண்டு வெடிக்கும்
அனல் கொண்டு வெடிக்கும்
மலர் போன்ற இதழ் இன்று
பனி கொண்டு துடிக்கும்
மலர் போன்ற இதழ் இன்று
பனி கொண்டு துடிக்கும்
துணை கொள்ள அவனின்றித்
தனியாக நடிக்கும்
துயிலாத பெண்மைக்கு
ஏனிந்த மயக்கம் ஆஆஆஆஆஆஅ...
கண்கள் எங்கே
நெஞ்சமும் எங்கே
கண்டபோதே சென்றன அங்கே
நெஞ்சமும் எங்கே
கண்டபோதே சென்றன அங்கே
கண்கள் எங்கே
நெஞ்சமும் எங்கே
கண்டபோதே சென்றன அங்கே ஏஏஏஏஏஏஏ

குழுவினர்:
ஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஅ
ஆஆஆஆஆஆஅ

சுசீலா:
இனமென்ன குலமென்ன
குணமென்ன அறியேன்
குணமென்ன அறியேன்

குழுவினர்:
ஆஆஆஆஆ

சுசீலா:
ஈடொன்றும் கேளாமல்
எனையங்கு கொடுத்தேன்
கொடை கொண்ட மதயானை
உயிர் கொண்டு நடந்தான்
குறை கொண்ட உடலோடு
நானிங்கு மெலிந்தேன்
ஆஆஆஆஆஆஆ

குழுவினர்:
கண்கள் எங்கே
நெஞ்சமும் எங்கே

சுசீலா:
கண்டபோதே சென்றன அங்கே
குழுவினர்: கண்கள் எங்கே 

------------------------------------------------------------

கண்ணில் என்ன கார்காலம்

படம் - உன் கண்ணில் நீர் வழிந்தால்
வரிகள் - வைரமுத்து
இசை - இளையராஜா
பாடியவர்கள்-எஸ்.பி.பாலசுப்ரமணியம்+ ஜானகி



கண்ணில் என்ன கார்காலம்
கன்னங்களில் நீர்க்கோலம்
மனமே நினைவை மறந்து விடு
துணை நான் அழகே துயரம் விடு
விழியில் விழும் துளி என் மார்பில்
வீழ்ந்ததே கண்ணே
அமுதம் சிந்தும் கண்ணில் கண்ணீரா
நியாயமா பெண்ணே

கண்ணில்...

நான் ஏங்கும் சுமையாக ஏன் வந்தேன்
சிறகெல்லாம் சிதையாக வாழ்கின்றேன்
நான் உறங்கும் நாள் வேண்டும்
சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும்
என் கண்ணில் நீர் வேண்டும்
சுகமாக அழ வேண்டும்

கண்ணில்...

இருள் மூடும் கடலோடு நான் இங்கே
என் தோணி கரை சேரும் நாள் எங்கே
பூவுக்குள் பூகம்பம் எங்கு வரும் ஆனந்தம்
நிழலாக நீ வந்தால் இது போதும் பேரின்பம்

கண்ணில்...
 -----------------------------------------------------------

கண்ணின் மணியே கண்ணின் மணியே

படம் - மனதில் உறுதி வேண்டும்.
பாடியவர் – சித்ரா
நடித்தவர் - சுகாசினி




கண்ணின் மணியே
கண்ணின் மணியே
போராட்டமா
உன் கண்களில் என்ன
கண்களில் என்ன
நீரோட்டமா
பெண் முன்னேற்றம் எல்லாம்
வெறும் பேச்சோடுதானா
பழம் பாட்டோடுதானா
அது ஏட்டோடுதானா
நாள் தோறும் பாடும்
ஊமைகள் தானா

கண்ணின் மணியே
கண்ணின் மணியே
போராட்டமா
உன் கண்களில் என்ன

கண்களில் என்ன
நீரோட்டமா
சாத்திரங்கள் பெண் இனத்தை
மூடி மறைத்ததம்மா
அந்த ஆத்திரத்தில் பாரதிக்கும்
மீசை துடித்ததம்மா
சாத்திரங்கள் பெண் இனத்தை
மூடி மறைத்ததம்மா
அந்த ஆத்திரத்தில் பாரதிக்கும்

மீசை துடித்ததம்மா

வீடாளும் பெண்மை இங்கே
நாடாளும் காலம் வந்தும்
ஊமைகள் போலவே என்றும்
ஓயாமல் கண்ணீர் சிந்தும்
ஏனென்று கேட்கத்தான்
இப்போதும் ஆளில்லை
சமநீதி சேர்க்கின்ற
சட்டங்கள் ஏன் இல்லை
உலகமெல்லாம் விடிந்த பின்னும்
உங்களின் இரவுகள் விடியவில்லை

கண்ணின் மணியே
கண்ணின் மணியே
போராட்டமா
உன் கண்களில் என்ன
கண்களில் என்ன
நீரோட்டமா
பெண் முன்னேற்றம் எல்லாம்
வெறும் பேச்சோடுதானா
பழம் பாட்டோடுதானா
அது ஏட்டோடுதானா
நாள் தோறும் பாடும்
ஊமைகள்தானா

கண்ணின் மணியே
கண்ணின் மணியே
போராட்டமா
உன் கண்களில் என்ன

கண்களில் என்ன
நீரோட்டமா
பாய் விரிக்கும் பாவை என்ன
காதல் பதுமைகளா
தினம் ஏவல் செய்ய ஆடவர்க்கு
காதல் அடிமைகளா
பாய் விரிக்கும் பாவை என்ன
காதல் பதுமைகளா
தினம் ஏவல் செய்ய ஆடவர்க்கு

காதல் அடிமைகளா

பொன் அள்ளி வைத்தால்தான்
பூமாலை தோளில் ஏறும்
இல்லாத ஏழையர்க்கெல்லாம்
பொல்லாத தனிமைக் கோலம்
எரிகின்ற நேரத்தில்
அணைக்கின்ற கையில்லை
சொல்கின்ற வார்த்தைகள்
ஒவ்வொன்றும் பொய்யில்லை
கனவுகளில் மிதந்த படி
கலங்குது மயங்குது பருவக்கொடி

கண்ணின் மணியே
கண்ணின் மணியே
போராட்டமா
உன் கண்களில் என்ன
கண்களில் என்ன
நீரோட்டமா
பெண் முன்னேற்றம் எல்லாம்
வெறும் பேச்சோடுதானா
பழம் பாட்டோடுதானா
அது ஏட்டோடுதானா
நாள் தோறும் பாடும்
ஊமைகள்தானா

கண்ணின் மணியே
கண்ணின் மணியே
போராட்டமா
உன் கண்களில் என்ன

கண்களில் என்ன
நீரோட்டமா

---------------------------------------------------------------

 

கண்ணால் பேசும் பெண்ணே

படம் : மொழி
பாடல் : கண்ணால் பேசும் பெண்ணே
இசை : வித்யாசாகர்
பாடியவர்கள் : S.P. பாலசுப்ரமணியம்

கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா
கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா
சலவைசெய்த நிலவே எனை மன்னிப்பாயா
சிறுதவறை தவறி செய்தேன் எனை மன்னிப்பாயா

எனது கோரிக்கை நீ கேளடி கேளடி
உனது கோபங்களும் ஏனடி
உனது சில்லென்ற கண் பாரடி பாரடி
எனது சாபங்களை தீரடி
(கண்ணால்)

நிலா பேசுவதில்லை அது ஒரு குறை இல்லையே
குறை அழகென்று கொண்டால் வாழ்க்கையில் எங்கும் பிழையில்லையே
பெண்ணே அறிந்துகொண்டேன் இயல்பே அழகு என்றே
பூவை வரைந்து அதிலே மீசை வரையமாட்டேன்
மௌனம் பேசும்போது சப்தம் கேட்கமாட்டேன்
மூன்றாம் பிறையின் உள்ளே நிலவைத் தேடமாட்டேன்
வாழ்வோ துவர்க்குதடி வயசோ கசக்குதடி
சைகையிலே எனை மன்னித்து சாபம் தீரடி
O I'm Sorry I'm Sorry I'm Sorry (4)
(கண்ணால்)

எங்கே குறுநகை எங்கே குறும்புகள் எங்கே கூறடி
கண்ணில் கடல்கொண்ட கண்ணில் புயல்சின்னம் ஏசோ தெரியுதடி
செல்லக் கொஞ்சல் வேண்டாம் சின்னச் சிணுங்கல் போதும்
பார்த்துப் பழக வேண்டாம் பாதிச் சிரிப்பு போதும்
காரப்பார்வை வேண்டாம் ஓரப்பார்வை போதும்
வாசல் திறக்க வேண்டாம் ஜன்னல் மட்டும் போதும்
வாழ்க்கை கடக்குதடி நாட்கள் நரைக்குதடி
இரு கண்ணால் என் வாழ்வை நீ ஈரம் செய்யடி
O I'm Sorry I'm Sorry I'm Sorry (4)
(கண்ணால்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக