திங்கள், 28 அக்டோபர், 2013

ஐசான் வால் நட்சத்திரம்-ஒரு பார்வை(comet)

மரியாதைக்குரியவர்களே,
               வணக்கம்.
            அனைவருக்கும் அறிவியல்- வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.இந்த பதிவில் வால் நட்சத்திரம் பற்றி தெரிந்துகொள்வோம்.

                                     
                          பெயர் தான் வால் நட்சத்திரமே தவிர அது நட்சத்திரமே அல்ல., வால் நட்சத்திரங்கள்  கிரகங்களைப் போன்றவை. பூமி, செவ்வாய், வெள்ளி, வியாழன், சனி போன்ற கிரகங்கள் சூரியனை சற்றே ஒதுங்கிய வட்டவடிவப் பாதையில் சுற்றுகின்றன.சூரியனுக்கும் ஒரு கிரகத்துக்கும் உள்ள தொலைவு ஓரளவில் நிலையானவை.. ஆகவே  இரவு வானில் இவற்றைக் காண இயலும்.

                 ஆனால் வால் நட்சத்திரங்கள் நீள் வட்டப்பாதையில் சூரியனைச் சுற்றுகின்றன். கிரகங்களுக்கு சுய ஒளி இல்லை என்பது போலவே வால் நட்சத்திரங்களுக்கும் சுய ஒளி கிடையாது.வால் நட்சத்திரங்களும் சரி, கிரகங்களும் சரி, அவற்றின் மீது சூரிய ஒளி படுவதால் நம் கண்ணுக்குத் தெரிகின்றன.


                   கிரகங்களுடன் ஒப்பிடுகையில் வால் நட்சத்திரங்கள் வடிவில் சிறியவை.     ஒரு வால் நட்சத்திரம் என்பது சிறிய குன்றுகள்  என்று சொல்லத்தக்க அளவிலான  பெரிய பெரிய பாறாங்கற்கள், சிறு கற்கள், மணல்,உறைந்த வாயுக்கள்,உறைந்த பனிக்கட்டி உருண்டைகள்,  ஆகியவற்றால் ஆனதே.

                      ஒரு வால் நட்சத்திரத்தின் குறுக்களவு சில நூறு மீட்டர் அளவில் இருக்கலாம். பல கிலோ மீட்டர் அளவிலும் இருக்கும்.(உதாரணமாக3கி.மீ இருக்கலாம். 300கி.மீட்டரும் இருக்கலாம்.) 

             இதுவே வால் நட்சத்திரத்தின் தலைப்பகுதியாகும் ( Nucleus).இந்த தலைப் பகுதியைச் சுற்றி சிகை (Coma) அமைந்திருக்கும், இது பஞ்சு மிட்டாய் மாதிரி. நுண்ணிய தூசு, வாயுக்கள் ஆகியவை அடங்கியதாக இருக்கும். இதன் குறுக்களவு பல லட்சம் கிலோ மீட்டர் அளவுக்கு இருக்கும். சூரியனை நெருங்கிய கட்டத்தில் தான் சிகை உருவாகிறது. இதன் மீது சூரிய ஒளி படும் போது தான் வால் நட்சத்திரம் பெரிய வடிவைக் கொண்டது போன்று காட்சி  அளிக்கிறது.

                       வால் நட்சத்திரத்துக்கு நிரந்தர வால் கிடையாது.பல நூறு கோடி கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் போது அது பெரிதும் பனிக்கட்டி உருண்டைதான். சூரியனை நோக்கிக் கிளம்பி பெரும்பாலான தூரம் வந்ததற்குப் பிறகு தான் வால் நட்சத்திரத்தின் வால் தோன்ற ஆரம்பிக்கிறது.

             சூரியனிலிருந்து வெளிப்படும் ஆற்றல் மிக்க துகள்களின் விளைவாகவே வால்  நட்சத்திரத்துக்கு வால் முளைக்கிறது. சூரியனின் இத் துகள்கள் Solar Wind  என்று அழைக்கப்படுகின்றன். இவை கிரகங்களையும் தாக்குகின்றன. வால் நட்சத்திரங்களையும் தாக்குகின்றன.

               ( சூரியனின் இத் துகள்களின் தாக்குதலால் வால் நட்சத்திரத்திலிருந்து வாயுக்களும், மிக நுண்ணிய துகள்களும் டன் கணக்கில்  வெளிப்பட்டு பின் நோக்கித் தள்ளப்படுகின்றன. இதுவே வால் போல அமைகிறது.விண்வெளியில் மிகத் தொலைவில் இருக்கும் போது வால் நட்சத்திரம் ஒழுங்கற்ற உருண்டையாகத் தான் இருக்கும். சூரியனை நெருங்க நெருங்க சூரியனின் வெப்பம் காரணமாகவும் சூரியனிலிருந்து வெளிப்படும ஆற்றல் மிக்க துகள்கள் காரணமாகவும் வால் நட்சத்திரத்திலிருந்து மேலே கூறிய வகையில் நுண்ணிய பொருட்கள் வெளிப்பட்டு வால் தோன்றும்.)
                    வால் நட்சத்திரத்தின் வால் விஷயத்தில் ஒரு விசித்திர அம்சம் உண்டு. சூரியனை  நோக்கி வரும் போது வால் நட்சத்திரத்தின் தலை முன்னே இருக்க வால் பின்னே இருக்கும். சூரியனை சுற்றி முடித்த பின்னர் வால் முன்னே செல்ல தலை பின் தொடர்ந்து செல்லும். 
              சூரிய ஒளி பட்டு இது நீண்ட வால் போல் காட்சி அளிக்கிறது. வால் நட்சத்திரத்தின் வால் பகுதி பல கோடி கிலோ மீட்டர்   நீளத்துக்கு  இருக்கலாம்.சொல்லப் போனால் 

              வால் நட்சத்திரத்துக்கு இரண்டு வால்கள் உண்டு. ஒன்று தூசு அடங்கிய வால். மற்றொன்று வாயுக்களால் ஆன வால். இரண்டிற்கும் மேலும் வால் பகுதிகள் இருக்கலாம்.
.                  

                 வால் நட்சத்திரங்கள் ஒவ்வொரு தடவையும் சூரியனை நோக்கி வருகையில் சூரியத் துகள்களின் தாக்குதலால் கணிசமான அளவில் பொருளை இழக்கின்றன. . ஆகவே பல தடவை வந்து சென்ற ஒரு  வால் நட்சத்திரம் இளைத்துக் காணப்படும்.  

                    சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரை வால் நட்சத்திரங்கள் மன்னர்களையும் மக்களையும் பயமுறுத்தின. வானில் வால் நட்சத்திரம் தோன்றினால் மன்னரின் உயிருக்கும் பதவிக்கும் ஆபத்து நேரும் என்ற மூட நம்பிக்கை நிலவியது. வால் நட்சத்திரம் தோன்றினால் உலகமே அழிந்து விடலாம் என மக்களும் அஞ்சினர். குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இந்த மூட நம்பிக்கை நிலவியது.


                பொதுவாக வால் நட்சத்திரங்கள் சூரிய மண்டல எல்லைக்கு அப்பால்
             (சூரிய மண்டலத்திலிருந்து oort cloud ஆரம்ப எல்லைக்கு உள்ள தூரம் 1000-2000au-ஒரு au என்பது 149597870.691கிமீ.இது பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம் ஆகும்.) 
                 ஊர்ட் முகில்(oort cloud)  எனப்படும் பகுதியிலிருந்து வருகின்றன. இவை கிரகங்களைப் போலவே சூரிய குடும்பத்தைச் சேர்ந்தவை. கிரகங்கள் சூரியனை வட்ட வடிவப் பாதையில் சுற்றுகின்றன. வால் நட்சத்திரங்கள் நீள் வட்டப் பாதையில் சுற்றுகின்றன.

                       பல வால் நட்சத்திரங்கள் திரும்பத் திரும்ப தலை காட்டிச் செல்லும்.
         (எந்த ஒரு வால் நட்சத்திரமும் குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தலை காட்டும்.)
                         அதற்கு ஓர் உதாரணம், Halley's Comet என்ற  ''ஹாலி''  வால் நட்சத்திரம் ஆகும். அது 75 ஆண்டுகளுக்கு ஒரு முறை வந்து செல்வதாகும். 1680 ஆண்டு வால் நட்சத்திரத்தின் பாதையை நிபுணர்கள் கணக்கிட்ட போது அது 575 ஆண்டுகளுக்கு ஒரு முறை தலைகாட்டலாம் என்று கருதப்பட்டது.

    ஐசான் வால்நட்சத்திரம் பற்றிய ஒரு அறிமுகம்.
                 (1) தற்போது காண இருக்கும் ISON என்ற புதிய வால் நட்சத்திரம் 2012ஆம் ஆண்டில் மிகத் தொலைவில் வியாழன் கிரகத்துக்கு அப்பால் இருந்தபோதே ரஷியாவைச் சேர்ந்த விட்டாலி நெவிஸ்கி, ஆர்ட்யோம் நோவிசோனோக்  ஆகிய இருவரும் (2012ல்) செப்டம்பர் மாதம்21ம் தேதியன்று  இந்த வால்நட்சத்திரத்தை  சக்திமிக்க தொலைநோக்கி மூலம் கண்டுபிடித்துள்ளனர்.  அதாவது 16இன்ச் விட்டமுள்ள Reflector Telescope-  (16''பிரதிபலிக்கும் தொலைநோக்கி) மூலம் கண்டறியப்பட்டது.
               
           (2) இந்த  வால் நட்சத்திரத்துக்கு C/2012 S 1  என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 
                    இந்த வால் நட்சத்திரத்திற்கு  ISON என்ற பெயரும் உண்டு.
       அதாவது 
               C/2012 S 1  -இல்  C என்பது காலமுறையற்ற(Non-Periodic) வால்வெள்ளி (COMET)2012 என்பது கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு. Sஎன்பது செப்டெம்பர் மாதம் இரண்டாவது பாதி(Half-Month)அதாவது கண்டுபிடிக்கப்பட்ட தேதி செப்டெம்பர் 21ம் தேதி,   1 என்பதுசெப்டெம்பர் மாதம் இரண்டாவது பாதியில் காணப்பட்ட முதல் வால்வெள்ளி.
                   இந்த வால் நட்சத்திரத்திற்கு இன்னொரு பெயரான
ISON என்ற பெயர்க்காரணம்-International Scientific Optical Network என்னும் சர்வதேச ஒளி ஊடகக் கூட்டமைப்பு என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால்,அதன் சுருக்கமான ISON என்ற பெயரை வைத்துள்ளனர்.

                       பெயருக்கான ஆங்கிலமொழி ஆக்கம் காணவும்.

              The comet's formal designation is C/2012 S1. The "C" indicates that it is non-periodic, followed by the year of discovery. The "S" represents the half-month of discovery—in the case of C/2012 S1, the second half of September—and the number "1" shows that this was the first comet found in that half month. The addition of "(ISON)" after its name merely identifies the organization where its discovery was made, the Russia-based International Scientific Optical Network. 

      (3) இந்த ISON வால் நட்சத்திரம் உட்கரு விட்டம்- ஐந்து கிலோமீட்டர் என கணக்கிடப்பட்டுள்ளது.   இந்த ISON வால் நட்சத்திரம் சாய்வு               கோணம்62.39டிகிரி ஆகும்.   

        (4) இந்த ISON வால்  நட்சத்திரம் சூரியனை நெருங்கும்போது அது0.012AU தொலைவில் இருக்கும்.  இந்த ISON வால் நட்சத்திரம் செவ்வாய் கிரகத்திலிருந்து 110இலட்சம் கிலோமீட்டர் தொலைவிற்கு வரும்.

           (5) நவம்பர் மாத வாக்கில் பூமிக்கு அருகில் வரும்   ISON எனப்படும்  வால் நட்சத்திரம் யார் கண்ணிலும் படாமல் தப்பாது என்கிற அளவுக்கு அது பெரியதாக இருக்கும் என்பதுடன் தொடர்ந்து பல நாட்களுக்கு அது காட்சி தரும். கடந்த 200ஆண்டுகளாக கண்டறிந்த வால் வெள்ளிகள் அதாவது வால் நட்சத்திரங்கள் மீண்டும்,மீண்டும் சூரியனை சுற்றி வந்தவைகளே.ஆனால் ஐசான்வால் நட்சத்திரம் சூரியனை நோக்கி வருவது இதுவே முதல்முறையாகும்.
          (6)இந்த ISON வால் நட்சத்திரம் சூரியனை நோக்கி வருவது மனித குலம் அறிந்தவரை இதுவே முதல் தடவையாகும். 
         இது சூரிய குடும்பம் தோன்றிய காலத்திலுள்ள தகவல்களை வைத்திருக்கும்.அதன்மூலம் உலகம் தோன்றியதை பற்றி மேலும் பல புதிய ஆய்வுகளை செய்ய உதவும்., பல புதிய தகவல்களையும் பெறலாம்
            (7) இந்த ISON வால் நட்சத்திரம் மற்ற வால் நட்சத்திரங்களைப் போலவே சூரியனை சுற்றி விட்டு வந்த வழியே சென்று விடும்.
         (8) இந்த ISON வால் நட்சத்திரம்  மீண்டும் தலைகாட்ட பத்து லட்சம் ஆண்டுகள் ஆகலாம்.  
           (9)இந்த ISON வால் நட்சத்திரம் மிகுந்த பிரகாசத்துடன் தெரியலாம் என்று சொல்வதற்குக் காரணங்கள் உண்டு. இது   நவம்பர் வாக்கில் சூரியனுக்கு மிக அருகாமையில் இருக்கும் போது ISON வால் நட்சத்திரத்திற்கும்- சூரியனுக்கும் மிகக் குறைவான தூரமே அதாவது 11 லட்சத்து 60 ஆயிரம் கிலோ மீட்டர் தூரமே இருக்கும். இதன் காரணமாக ஐஸ் துணுக்குகள், தூசு, வாயு துணுக்குகள் வடிவில் நிறையப் பொருட்களை அது  இழக்கும். ஆகவே அது பெரிய நீண்ட வாலைப் பெற்றதாக இருக்கும். ஒப்பு நோக்குகையில் இது பூமிக்கு அருகாமையில் அமைந்திருக்கும் .                
                

             (10) இந்த ISON வால் நட்சத்திரம்பற்றி வால் நட்சத்திர நிபுணர் ''ஹான் போர்ட்டில்' கூறுகையில் ஒரு வேளை இது 1680  ஆம் ஆண்டில் தலைகாட்டிய  வால் நட்சத்திரமாகவும் இருக்கலாம் என்றார்.
            (11)
இந்த ISON வால் நட்சத்திரம் பற்றிக் குறிப்பிட்ட ஒருசில நிபுணர்கள் அது பற்றிய பெரிய எதிர்பார்ப்பு  ஏமாற்றத்தில் போய் முடிவதற்கும் வாய்ப்பு உள்ளது என்றும்  கூறியுள்ளனர். அதற்கு உதாரணமாக வானில் பெரிதாக எடுப்பாகத் தெரியும் என்று எதிர்பார்க்கப்பட்ட வால் நட்சத்திரங்கள் கடந்த காலத்தில் மிகச் சிறியதாக ஒளி மங்கியதாகத் தலைகாட்டிச் சென்றுள்ளன.
             (12) மிகப் பிரபலமான    ஹாலி வால் நட்சத்திரம்   1910 ஆம் ஆண்டில் தலைகாட்டிய போது பிரமிப்பூட்டுவதாக இருந்தது. ஆனால் அது மறுபடி 1986 ஆம் ஆண்டில் தலைகாட்டிய போது முந்தைய அளவுக்குப் பெரிதாக இல்லாமல் பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
    மின் அலைகள்,ஒளி அலைகள் ஒரு விநாடிக்கு செல்லும் தூரம்=297600கி.மீ.ஆகும்.ஆக ஒரு ஒளிவிநாடி தூரம் இது.அப்படியானால் ஒரு ஒளிஆண்டு என்பது  297600X60X60X24X365=9385113600000 கி.மீ.தூரம் ஆகும். அதாவது 63241.077au ஆகும்.    
 astronomical unit என்னும் குறியீடான Au என்பது பூமிக்கும் சூரியனுக்கும் தூரம்- இதன் அளவு = 149597870.690கி.மீ.


 வானவியல் அதிசயங்கள் இன்னும் அறிந்து கொள்வோம்.
என அன்பன்
பரமேஸ்டிரைவர்-
தாளவாடி.










The Eye, Focus and Optical Lens

ABOUT SUN MOON EARTH IN SCIENCE- NEW MOON, ECLIPS, & ORBIT WMV

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

அறிவியல் செய்திகளுக்கான வலைத்தளங்கள் சில..

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.அனைவருக்கும் அறிவியல் வலைப்பக்கத்திற்கு   தங்களை வரவேற்கிறோம்.அறிவியல் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இதோ மூன்று வலைத்தளங்கள் காண்க...

                சி. ஜெயபாரதன் (jayabharathan.wordpress.com)

                                   கனடாவில் வசிக்கும் சி. ஜெயபாரதனுக்கு வயது இன்னும் சில ஆண்டுகளில் எண்பதைத் தொட இருக்கிறது. தொடர்ச்சியாக 'நெஞ்சின் அலைகள்' என்கிற தன்னுடைய வலைப்பதிவில் எழுதுகிறார். பெரும்பாலும் பிரபஞ்சத்தின் ரகசியங்களைக் குறித்தான சமீப கால அறிவியல் கண்டுப்பிடிப்புகளைப் பற்றி தான் விரிவாக எழுதுகிறார். அறிவியல் பற்றிய தமிழ் கவிதையில் தொடங்கி ஆங்கில விஞ்ஞான மேற்கோள்களைக் குறிப்பிட்டு பல படங்களை எடுத்து காட்டி எளிய நடையில் நுட்பமான விஷயங்களை சுவாரஸ்யமாக அலசுகிறார். பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் என்று அவர் எழுதுகிற தொடர் முக்கியமானதாக இருக்கிறது.

  • பெருவெடிப்பு தான் பிரபஞ்சத்தின் தொடக்கம் என்கிறார்கள். அந்தப் பெருவெடிப்பிற்கு முன்பு என்ன இருந்தது?
  • பிரபஞ்சத்தின் விதியை நிர்ணயம் செய்வது எந்தச் சக்தி?
  • ஈர்ப்பு விசை என்பது மாயையாக இருக்கலாம்?
என். ராமதுரை (www.ariviyal.in)

தினமணி நாளிதழில் முன்பு செய்தி ஆசிரியராக இருந்தவர். இப்போது அறிவியல்புரம் என்று வலைப்பதிவு தொடர்ந்து எழுதி வருகிறார். இதில் சுவாரஸ்யமான அறிவியல் செய்திகள் கொட்டி கிடக்கின்றன. சூரியன் தலைக்கு நேர் மேலே இருக்கும் போது தான் அதிகமான வெயில் என்று சொல்வார்கள். ஆனால் மதியம் இரண்டு மணி தொடங்கி இரண்டரை வரை தான் அந்த நாளின் அதிகமான வெயில் இருப்பதாக சொல்கிறார்.
  • சந்திரன் தோன்றியது எப்படி?
  • அக்னி நட்சத்தித்தின் போது அதிக வெயில் ஏன்?
  • சூரியன் தனி நட்சத்திரம். ஆனால் பல நட்சத்திரங்கள் ஜோடி ஜோடியாக இருக்கின்றன.
ராஜா சங்கர் (rajasankar.in)

தமிழில் அறிவியல் தகவல்களைச் சொல்வதற்காகவே வலைப்பதிவு நடத்தி வருகிறார் ராஜா சங்கர். 'குவாண்டம் கொள்கையும் இருக்கும் துகள்களும்' என்று நீண்ட தொடரினை எழுதி கொண்டு இருக்கிறார். இந்த உலகில் உயிர் எப்படி தோன்றியது? மனிதன் எப்படி தோன்றினான் பற்றி பேசிய டார்வினின் பரிணாமக் கொள்கையை எளிய தமிழில் தொடராக எழுதுகிறார்.

  • உயிர்களின் தோற்றம் குறித்தான டார்வின் பரிணாமக் கொள்கை
  • குவாண்டம் கொள்கை
.

முதல் குடிமக்கள்-தென்னிந்தியர்களே

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.

                    மூத்தக் குடி தமிழ்க்குடி!
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி” இவை, பழம்பெருமையை பறைசாற்ற கூறப்பட்ட வெற்று வார்த்தைகள் அல்ல என்பதை நிரூபித்திருக்கிறது சமீபத்தில் வெளியான மரபியல் ஆராய்ச்சி முடிவு ஒன்று. ஆமாம். ‘தொன்மையான இந்தியாவின் மூத்த குடிகள், முதல் குடிமக்கள் தென்னிந்தியர்கள்தான்’ என்பதை நிரூபித்து இருக்கிறார்கள் ஹைதராபாத்தில் உள்ள ‘சென்டர் ஃபார் செல்லுலார் அன்ட் மாலிகுலார் பயாலஜி’ ஆய்வு மையத்தினர். 
                          உலக அளவில் விஞ்ஞான ஆராய்ச்சி முடிவுகளை அதிகாரபூர்வமாக அறிவித்து அங்கீகாரம் தருவதில் ‘நேச்சர்’ என்ற சர்வதேச ஆங்கில விஞ்ஞான இதழ் முதன்மையானது. இந்தியாவில் நடத்தப்பட்ட ஓர் ஆராய்ச்சியைப் பாராட்டி தனது அட்டைப்பட கட்டுரையாக ‘நேச்சர்’ பத்திரிகை வெளியிட்டிருப்பது இதுதான் முதன்முறை. இதுவே, இந்த ஆராய்ச்சியின் மகத்துவத்தை வெளிப்படுத்தியிருக்கி றது என உற்சாகத்தில் இருக்கிறார்கள் ஹைதராபாத் ஆய்வு மையத்தினர். 
 
                 இது நமது தொன்மையின் காலரைத் தூக்கிவிட்டுக்கொள்ள உதவுகிறது என்றால்... இதைவிட இன்னொரு மகிழ்ச்சித் தகவல், இந்த ஆய்வை மேற்கொண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எட்டிய விஞ்ஞானிகள் குழுவில் மிக முக்கியமானவரான கே.தங்கராஜ், ஒரு தமிழர் என்பதுதான். 
                               “65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஆதி மனிதனைப் பற்றிய ஆராய்ச்சியை 14 வருடங்கள் இடைவிடாது நடத்தி முடித்து இந்த முடிவை எட்டி இருக்கிறோம். 
                     பொதுவாகவே மனித குழுக்கள்... மொழிக் கூறுகளின் அடிப்படையில் திராவிடன், இந்தோ- ஐரோப்பியன், ஆஸ்ட்ரோ--ஏஷியாடிக், திபெத்தோ-பர்மன் என்ற பெரும்பிரிவுகளாக பிரிக்கப்படுகிறார்கள். இது தவிர, அந்தமான் மொழியினர், மற்றும் இந்தியத் துணைக் கண்டத்தில் பல்வேறு பகுதிகளை, சமூக ரீதியிலான குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 25 மனிதக் குழுக்களை இந்த ஆராய்ச்சிக்காக சாம்பிள் எடுத்துக் கொண்டோம். 
                அதாவது இந்தக் குழுக்களில் இருந்து 132 தனிநபர்கள், அவர்களின் ஒரு லட்சம் டி.என்.ஏ. ஒரு மூலக்கூறு வேறுபாடு (எஸ்.என்.பி.)மாதிரிகளை ஆராய்ச்சிக்கு உட்படுத்தினோம். இந்த மனிதக் குழுக்களில் ஓங்கே, கிரேட் அந்தமானிஸ் உட்பட ஆதிவாசி இனக் குழுவினர் மற்றும் நிகோபாரில் வசிக்கும் மனிதக் குழுவினரை ஆராயும்போது, பல வியக்கத்தக்கத் தகவல்கள் கிடைத்தன. இதே போன்ற ஆராய்ச்சியை நாம் 2005-ல் செய்தபோது, அது உலகின் முக்கியமான அறிவியல் இதழான ‘சயின்ஸ்’ பத்திரிகையில் வெளிவந்தது. அதன் நீட்சிதான் இந்த ஆய்வு.
                      பொதுவாக மனித இனம் இன்றைய ஆப்ரிக்கா கண்டப் பகுதிகளில்தான் முதலில் உருவானது என்பதே இன்றுவரை ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. ஆப்ரிக்கக் கண்டத்தில் உருவான மனித இனம், உலகம் முழுவதும் எப்படி நகர்ந்துவந்தது என்பதுதான் முக்கியக் கேள்வி. ஆப்ரிக்காவிலிருந்து கடல்வழியாக நகர்தல், நில வழியாக நகர்தல் ஆகிய இரு வழிகளில்தான் ஆதிமனிதர்கள் மற்ற கண்டங்களுக்கு வந்திருக்க முடியும் என இருவேறு கருத்து நிலவி வந்தது. இந்த நிலையில்தான் எங்களுடைய ஆராய்ச்சி... அந்தமானின் ஆதிவாசிகள்தான் முதன்முதலில் ஆப்ரிக்காவிலிருந்து சுமார் 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தெற்குக் கடற்கரை வழியே, வெளியேறிய முதல் மக்கள் குழு என்ற மகத்தான உண்மையை பறைசாற்றியது.
                                      இந்த அந்தமானிய ஆதிவாசிகளுக்கும் இந்தியத் துணைக் கண்டத்தில் வசிக்கும் மற்ற மக்கள் இனங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?, இந்திய மண்ணில் மட்டும் வேறு எங்கும் இல்லாத 4,635 மனிதக் குழுக்கள் எப்படி உருவாயிற்று? என்பதை ஆராயத்தான் தற்போது, வெவ்வேறு மனிதக் குழுக்களை பரிசோதனை செய்தோம்.                                
                           பொதுவாகவே நம்மில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறோம். உயரம், குள்ளம், பருமன், ஒல்லி இதுபோன்ற வெளியில் தெரியும் மாற்றங்களைப்போல, வெளியே தெரியாத நுண்ணிய மாற்றங்கள் டி.என்.ஏ.-வுக்குள் நடந்து கொண்டே இருக்கும். இதை மரபணு வேற்றுமை (ஜெனிடிக் வேரியேஷன்) என்பார்கள். அந்த வகையில் மனிதக் குழுக்களை ஒப்பிட்டு ஆய்வு நடத்தியபோது... வட இந்தியர்களும் ஐரோப்பியர்களும் மரபியல் ரீதியாக சுமார் 30-70% வரை ஒத்துப் போனார்கள். ஆனால், தென்னிந்தியர்கள் உலகின் எந்தப் பகுதியில் உள்ள மரபியலோடும் ஒத்திருக்கவில்லை. அதே நேரம்... அந்தமான் பழங்குடி மக்களின் மரபியல் கூறுகள், தென்னிந்திய தொன்மை மக்களின் மரபியல் கூறுகளோடு சில வகையில் ஒத்துப் போகின்றன. 
                          ஆக... ஆப்ரிக்காவில் இருந்து அந்தமான் பகுதிக்கு வந்த ஆதிகால மனிதர்கள் முதலில் தென்னிந்தியாவில்தான் குடியேறினார்கள். இதனைத் தொடர்ந்து சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு (சுமார் 40 ஆயிரம் ஆண்டுகள்) வேறு ஒரு குழுவினர் வட இந்தியாவில் குடியேறியிருக்கலாம். காலப்-போக்கில் தென்னிந்தியாவில் முதலில் குடியேறியவர்களில் இருந்து சிறு சிறு குழுக்களாக பிரிந்து வடக்கு நோக்கியும், வட இந்தியாவில் குடியேறியவர்கள் தெற்கு நோக்கியும் நகர்ந்திருக்கக் கூடும். இப்படி உருவான குழுக்கள் ஒரு காலகட்டத்தில் கலந்திருக்கக் கூடும். ஆனாலும் அந்தமான் பழங்குடியின மக்களின் மரபியல் கூறுகள், உலகின் வேறு எந்தப் பகுதி மனிதக் குழுக்களில் இருந்தும் முற்றிலும் வேறுபட்டிருக்கின்றன. 
                            ஆக, அவர்கள் 65 ஆயிரம் ஆண்டுகளாகத் தனித்தே இருக்கிறார்கள். அவர்களிலிருந்து ஒரு சில வகையில் மட்டும் வேறுபட்டாலும் தென்னிந்திய தொன்மை மக்கள் வேறு யாரோடும் ஒத்துப்போகவில்லை என்பதால் வட இந்தியர்களைவிட தென்னிந்தியர்கள்தான் இந்தியத் துணை கண்டப் பகுதியின் மூத்த குடிகள் முதல் குடிகள் என்பதைக் கண்டறிந்தோம்” என்றவரிடம், “சிந்து சமவெளி நாகரிகம்தான் முதல் நாகரிகம் என்ற ஆய்வு முடிவுகளுக்கு இது முரணாகத் தோன்றுகிறதே..?” என நாம் கேட்க... “இது தேவையில்லாத குழப்பம். நாங்கள் மேற்கொண்ட ஆராய்ச்சி, ப்ரி-ஹிஸ்டாரிக் அதாவது வரலாற்று காலத்துக்கு முந்தையது. நீங்கள் கேட்கும் நாகரிகம் சில ஆயிரம் ஆண்டுகளாக பின்பற்றப்படுவது. உதாரணத்துக்கு கிராமங்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் சென்னை மாநகருக்குக் குடியேறி நகர்ப்புற கட்டமைப்பை ஏற்படுத்தவில்லையா? அதுபோல, சிந்து சமவெளி நாகரிகத்தைப் பின்னாட்களில் கட்டமைத்திருக்கலாம். மேலும் இந்த ஆராய்ச்சியின் மூலம் வெவ்வேறு மனிதக் குழுக்களின் ஜீன்கள், குரோமோசோம்கள் பற்றி நுண்ணிய முடிவுகள் பல கிடைத்துள்ளன. இது பல நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்கும்” எனச் சொல்லி முடித்தார் ‘தமிழ் மரபு’க்கு மகுடம் சூட்டியிருக்கும் விஞ்ஞானி கே. தங்கராஜ்.
                              ஆதி மனிதன் பிற கண்டங்களுக்கு பரவியது எப்போது, எப்படி? ஆதிமனிதன் ஆப்பிரிக்கக் கண்டத்தில்தான் தோன்றினான் என்பது அனைத்து ஆய்வாளர்களும் ஏற்றுக்கொள்ளும் விடயம். ஆனால், அந்த ஆதிமனிதன் பிற கண்டங்களுக்கு முதன்முதலில் பரவியது எவ்வாறு, எப்போது என்பதில்தான் சர்ச்சை. ஆப்பிரிக்காவிலிருந்து மனித இனம் முதலில் சென்றது நிலவழியிலா, கடல்வழியிலா என்ற கேள்விக்கு இந்திய விஞ்ஞானிகள் கடல்வழிதான் என்ற பதிலை முன்வைத்திருக்கிறார்கள். அதாவது, சுமார் 70,000 ஆண்டுகள் முன்பாக, மனித இனத்தவர், ஆப்பிரிக்காவிலிருந்து கடல்வழியாகப் புறப்பட்டு, இந்தியாவின் மேற்குக் கடற்கரை வழியாகச் சென்று, பிறகு வங்காள விரிகுடாவில் உள்ள அந்தமான் தீவுக்கூட்டத்தை இவர்கள் அடைந்தார்கள் என்று இந்திய விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். தற்போது அந்தமான் தீவுகளில் வசித்துவரும் பழங்குடியினரின் மரபணுக்களை ஆய்வு செய்ததில் இந்த முடிவை உறுதிசெய்திருப்பதாக இந்த விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். இந்த முடிவை எட்ட, இந்த அந்தமான் பழங்குடியினரின் மரபணுக்களை ஆய்வு செய்திருக்கிறார்கள், அதாவது, இதே காலகட்டத்தில் ஆசியக்கண்டத்தில் உள்ள மற்ற இனத்தவரின் மரபணுக்கள் அடைந்த மாற்றங்களை விட, அந்தமான் தீவுக்கூட்டத்தில் தனித்தே வசித்துவரும் பழங்குடியினரின் மரபணுக்கள் குறைந்த அளவு மாற்றங்களைப் பெற்றிருக்கிறது என்பது இங்கே முக்கியம். எனவேதான் இவர்களின் மரபணுக்கள் – அவற்றில் உள்ள எக்ஸ் மற்றும் ஒய் குரோமசோம் பகுதிகள், பிறகு மிட்டோகோண்ட்ரியா என்று அழைக்கப்படும் மரபணுத் தொடர் மைய மாற்றங்கள் ஆகியவற்றை ஆராய்ந்திருக்கிறார்கள், இந்திய விஞ்ஞானிகள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த முடிவை ஒரு யூகமாக எட்டியவர்கள், ஹைதராபாதில் இயங்கிவரும் இந்திய மூலக்கூற்று உயிரியல் ஆய்வு மைய விஞ்ஞானிகள். அப்போதே, இந்த விஞ்ஞானிகள் குழுவில் ஒருவராக இயங்கிவருகிற தங்கராஜ் அவர்களைத் தமிழோசை செவ்வி கண்டிருந்தது. இப்போது மேலதிக ஆராய்ச்சியின் மூலம் இந்த முடிவு உறுதியாகியிருக்கிறது, அது மட்டுமல்ல, இங்கே ஸ்காட்லாந்தில் கிளாஸ்கோ பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் வின்சன்ட் மக்காலே என்ற விஞ்ஞானியும் தம்முடைய ஆராய்ச்சியின் மூலம் இதைப்போன்ற ஒரு முடிவை எட்டியிருக்கிறார். அவர் ஆய்வு செய்தது, ஆஸ்திரேலியா, மலேசியாவில் உள்ள பழங்குடியினர் பற்றி.
                     ஆதிகால மனிதன் எவ்வாறு இறந்தான்?          பொதுவாக மனிதர்கள்தான் வனவிலங்குகளைவேட்டையாடிக் கொன்றார்கள்என்ற நம்பிக்கை நிலவி வந்தது. ஆனால், 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, வாழ்ந்தகுரங்குமனிதன், பறவைகளால் வேட்டையாடிக் கொல்லப்பட்டான் என்பதை நிருபித்துள்ளார் லீ. ருபர்ஜர்  என்ற ஜோகன்னஸ் பர்க் பல்கலைகழகத்தின் தொல்படிவ மானிடவியல் அறிஞர். டவுங்குழந்தை எனப்படும் மனித முதாதையரின் தொல்படிவுகள் 1924 இல்கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்தே அந்தமனிதன் எவ்வாறு இறந்திருப்பான் என்ற விவாதம் நடைப்பெற்றது வந்தது.  ஒருபுலியோ, ஈட்டிபேன்ற கூர்மையான பற்களைஉடைய பூனைபோன்ற விலங்கோத்தான் ஆதிமனிதனைக் கொன்றிருக்கவேண்டும் என்று ஆய்வாளர்கள் யோசித்து வந்தனர். ஆனால் ஆதிமனிதனை புலிஅடித்து கொல்லவில்லை ஒரு பெரிய   பறவைத்தான் வேட்டையாடிக் கொன்றது என்று புத்தாண்டுகளுக்கு முன்பு லீபெர்ஜர், தமது சகஆராய்ச்சியாளர் ரோன்கிளர்க்குடன் சேர்ந்து நிருபித்தார். ஆதிமனிதனின் புதைப்படிவுகள் கிடைத்தஇடத்தில் இருந்துசிறியகுரங்குகளின் புதைபடிவுகளில்இருந்து அவை பறவையால்தான் கொல்லப்பட்டனஎன்பது நிருபிக்கப்பட்டது.  ஆகவே குரங்குபோன்றுஇருந்த ஆதிமனிதனும்பறவையால்தான் கொல்லப்பட்டிருக்கவெண்டும் என்றவாதத்தைஅவர்கள்முன்வைத்தனர். ஆனால்பறவைதாக்கித்தான்ஆதிமனிதன் இறந்தான் என்பதை அவனுடைய மண்டை ஓட்டில் ஏற்பட்ட சேதம் மூலம் இவர்களால் நிருபிக்க முடியாமல் இருந்தது. ஜந்து மாதங்களுக்கு முன்பு மேற்கு ஆபிரிக்காவில் காணப்படும் கழுகுகள் ஆதிமனிதனை வேட்டையாடிய பறவை போல் இருப்பதை எடுத்து பாட்டும் ஓஹேயோ அரசின் கட்டிரை ஒன்றை லீ பெர்ஜர் படித்தார்.  கழுகுகள் மேலே இருந்து கீழ் நோக்கிப் பாய்ந்து தங்களது கூரிய கால் விரல்களால் குரங்குகளின் மண்டை ஓட்டை குத்திக்கிழிப்பதாக கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான குரங்குகளின் மண்டை ஓடுகளை ஆராய்ததில் கண்துளைகளுக்கு பின்னால் ஓரே மாதிரியான துளைகளும்,வெட்டுக்களும் தெரிந்தன. இரதப்படித்த பெர்ஜர் டவுங் குழந்தையின் மண்டை ஓட்டுடன் ஒப்பிட்டார். அதிலும் கண்துளைகளுக்குப் பின்னால் வெட்டுக் காயம் ஏற்படும் சேதம் தெரிந்தது.ஆகவே ஆதிமனிதன் வானில் இருந்தும் வேட்டையாடிக் கொல்லப்பட்டது. சுகன்யாதரம்-10 
                                             குரங்கில் இருந்கு மனிதன் தோன்றினான் என்ற வாதத்தை விட, முதலில் இவ்வுலகை எடுத்துக்கொண்டால் பூமி சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகியது என்கிறார்கள். 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கலம் கொண்ட செல் உருவாகியதாகவும், 2 பில்லியன் ஆண்டுக்கு முதல் சிக்கலான செல்லமைப்பைக் கொண்ட செல்( கலம்) உருவாகியது என்றும், பின்னர் 1 பில்லியன் ஆண்டிற்கு முன்னர் பல கலங்கள் கொண்ட செல் உருவாகி , பின்னர் 600 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் சில மிருகங்கள் உருவாகியதாகவும் சொல்லப்படுகிறது. பின்னர் முறையே :
இற்றைக்கு 570 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஆத்திரபோடாக்களும்
550 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் சிக்கலான வடிவம் கொண்ட சில மிருகங்களும்
500 மில்லியன் ஆண்டுக்கு முன்னர் மீன்களும், சூரிய ஒளியை கொண்டு சக்தியை தயாரிக்கும் உயிரினங்களும் உருவாகின.
475 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் சில தாவர வகைகள் உருவாகின.
360 மில்லியன் ஆண்டிற்கு முன்னர் அமீபியா போன்ற பிராணிகள்( உதாரணம் தவளை) போன்ற உயிரினம் உருவாகியது
300 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் ஊர்வனவும்
200 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் பாலூட்டிகளும்
150 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் பறவைகளும்
65 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் சில வகை டைனசார்களும்
2.5 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் ஜீனஸ் ஹோமோ என்ற மனிதரை ஒத்த இனமும் தோன்றியது.
                        200 ஆயிரம் வருடத்திற்கு முன்னரே தற்போது காணப்படும் மனிதனை ஒத்த மனிதன் தோன்றினான் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதில் ஜீனஸ் ஹோமோ எனப்படும் இனம் மனிதரைப் போலக் காட்சியளிப்பதாக அதன் எலும்புக்கூடுகள் மற்றும் மண்டை ஓடுகள் என்பவற்றை பார்க்கும் போது தெரிவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.                            
                 சுமார் 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் அஸ்ரோலோபோதனிக் என்ற இனமும் உருவாகியது, அதுவும் மனிதர்களைப் போலவே காட்சியளித்தது என்பதற்கான ஆதாரங்களும் உள்ளது. இதனிடையே பராந்தரோப்ஸ் எனப்படும் மற்றும் ஒரு மனித இனம் காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் வெவ்வேறு காலப் பகுதியில் உருவாகி இருந்தாலும் சில ஆண்டுகளில் அவை ஒன்றுடன் ஒன்று சேர்ந்து இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு இறுதியாக மனிதன் தோன்றி இருக்கலாம் என சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
                                  குறிப்பாக கென்யா, ஆபிரிக்கா, ஜோர்ஜியா, ஜாவா தீவுகள், சீனா, இந்தியா போன்ற இடங்களிலேயே பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வகையான ஜீனோ ஹோமோ இனம் தோன்றியுள்ளது. குறிப்பாக ஆப்பிரிக்காவில் தோன்றிய இனம் தாடை பெரிதாகவும் மண்டை ஓடு பின்புறம் நீளமாகவும், காணப்படுகிறது. ஆசியக் கண்டத்தில் தோன்றிய இனத்தில் மண்டை ஓடு சிறியதாகவும் உயரம் குறைவானதாகவும், சில குளிர் பிரதேசங்களில் தோன்றிய ஜீனோ ஹோமோக்கள் பொதுவான ஒரு அமைப்பையும் கொண்டுள்ளதாக அறியப்படுகிறது. பிற்காலத்தில் இவற்றின் கலவையே தற்போது உள்ள நவீன மனித இனமாகும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். 
               நவீன மனிதனுக்கும் குரங்குகளுக்கும் இடைப்பட்ட ஒரு இனம் வாழ்ந்ததாகவும் அவை பல பொருட்களை உபயோகிக்க கற்றுக்கொண்டதையும் ஆய்வாளர்களும் அகழ்வாராய்ச்சி செய்பர்களும் தற்போது நிரூபித்துள்ளனர். ஆதி காலத்தில் உள்ள மனிதனின் கைகள் நீளமாக இருந்ததையும் பின்னர் அது குறுகியதும், கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சூரிய ஒளி இருப்பதால் அதைப் பார்க்க கண்கள் உருவாகியிருக்கின்றன, ஒலி என்று ஒன்று இருப்பதால் அதைக் கேட்க காதுகள் உருவாகியிருக்கின்றன. கைகள் நீளமாக இருக்கவேண்டியது அவசியம் இல்லை என்றால் பரிணாம வளர்ச்சியின் போது அவை குட்டையாகிவிடுகின்றன என்று, எல்லாவற்றையும் பரிணாம வளர்ச்சி என்று விஞ்ஞானிகள் அதன் தலையில் கட்டி விடுகிறார்கள், ஒருபடி மேலே போய் பரிணாம வளர்ச்சி என்றால் என்ன என்றால் அதற்கு சிலர் இயற்கையையே காரணம் என்று கூறுகிறார்கள், அதாவது சூரிய ஒளி ஒரு பொருள் மீது பட்டுத் தெறித்து அது நமது கண்களை அடைந்து விழித்திரையில் தலைகீழாகத்தான் பிம்பமாகத் தோன்றுகிறது, இருப்பினும் அதனை மூளைக்கு எடுத்துச் செல்லும் நரம்புகள் சரியான, நேரான பக்கமாக காட்டுகிறது. இது கூட பரிணாம வளர்ச்சிக்குத் தெரியுமா இல்லை இயற்கை இதை அறியுமா? என்ன ஒரு வேடிக்கையான் விசயம். 

இந்தியத் தீவுகள்

மரியாதைக்குரியவர்களே,
             வணக்கம்.
                     அனைவருக்கும் அறிவியல் வலைப்பக்கத்திற்கு தங்களை வருக வருக என வரவேற்கிறோம்.இந்த பதிவில் இந்தியத்தீவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
                                                             இந்தியத் தீவுகள்
                                  அந்தமான் தீவுகள்என்பது வங்காள விரிகுடாவில் உள்ள ஒரு தீவுக் கூட்டம் ஆகும். இது இந்தியாவின் அந்தமான் நிகோபார் தீவுகளின் ஒரு பகுதியாகும். போர் பிளேர் நகரமே இதன் நிர்வாக மையம் ஆகும். அந்தமான் தீவுகள் அனைத்தும் அந்தமான் மாவட்டம் என்ற நிர்வாக அமைப்பின் கீழ் வருகின்றன. மற்றொரு மாவட்டமான நிகொபார் மாவட்டம் 1974-ஆம் ஆண்டு உருவானது. அந்தமானின் மக்கள் தொகை 2001-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 314, 084 ஆகும். இத்தீவுக்கூட்டத்தில் மொத்தம் 576 தீவுகள் உள்ளன. அவற்றில் இருபத்து ஆறு தீவுகளில் குடியேற்றங்கள் உள்ளன. இவை ஊக்ளி ஆற்றில் இருந்து 950 கிலோமீட்டர் தொலைவில் உள்ளன. இத்தீவுத் தொடரின் மொத்த நீளம் 352 கி.மீ. அதிகபட்ச அகலம் 51 கி.மீ ஆகும். அந்தமானின் மொத்த பரப்பளவு 6408 சதுர கி.மீ. ஆகும்.அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தென்கோடித் தீவிலுள்ள இந்திரா முனை என்ற இடம், இந்திய நாட்டின் தென்முனையாகும்.
                                     லட்சத்தீவுகள் இந்தியாவிலுள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்று. இதன் தலைநகரம் கவரத்தி ஆகும். இது மொத்தம் 32 கிமீ² பரப்பளவு கொண்ட 36 தீவுகளாக அமைந்துள்ளது. கேரளக் கரைக்கு அப்பால் 200 தொடக்கம் 300 கிமீ தூரத்தில், அரபிக் கடலில் இது உள்ளது. முக்கிய தீவுகள் கவராட்டி, மினிக்கோய், அமினி என்பனவாகும். 10 மக்கள் வாழும் தீவுகளின் மொத்தச் சனத்தொகை 51,000 ஆகும்.
                                   நிக்கோபார் தீவுகள்(Nicobar Islands) இந்தியப் பெருங்கடலின் கிழக்கே, இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஒன்றியப் பகுதியில் உள்ள தீவுக் கூட்டம் ஆகும். இவை இந்திய உபகண்டத்தின் தென்கிழக்கே வங்காள விரிகுடாவினால் 1,300 கிமீ தூரத்தில் பிரிக்கப்பட்டுள்ளது. நிக்கோபார் தீவுகள் அந்தமான் தீவுகளுக்கு தெற்கே, இந்தோனேசியத் தீவான சுமாத்திராவுக்கு வடமேற்கே ஏறத்தாழ 189 கிமீ தூரத்தி அமைந்துள்ளன. மொத்தம் 22 தீவுகளை நிக்கோபார் தீவுகள் கொண்டுள்ளது. இவற்றில் பெரிய தீவு பெரும் நிக்கோபார் தீவு. இந்தியாவின் தென்கோடியான இந்திரா முனை பெரும் நிக்கோபாரிலேயே அமைந்துள்ளது. இத்தீவுக்கூட்டத்தின் மொத்த நிலப்பரப்பு 1841 கிமீ². 
                            அதிஉயர் புள்ளி பெரும் நிக்கோபார் தீவில் உள்ள துளியர் மலை. இதன் உயரம் 642 மீட்டர். 2001 ஆண்டு கணக்கெடுப்பின் படி இதன் மக்கள் தொகை 42,026. இவர்களில் 65 விழுக்காட்டினர் பழங்குடிகள் (நிக்கோபார் மக்கள் மற்றும் சோம்பென் மக்கள்). ஏனையோர் இந்தியாவின் பெருநிலப்பரப்பையும், இலங்கைத் தீவையும் சேர்ந்தவர்கள். நிக்கோபார் தீவுகளில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் குடியேற்றம் ஆரம்பித்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஆறு பழங்குடி நிக்கோபார் மொழிகள் இத்தீவுகளில் பேசப்படுகின்றன. இவை ஆஸ்திர-ஆசிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொன்-கெமர் பிரிவைச் சேர்ந்தது. பெரும் நிக்கோபாரின் தென்கோடியில் வாழும் சோம்பென் என்ற பழங்குடிகள் தென்கிழக்காசிய இடைக் கற்கால இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். "நிக்கோபார்" என்ற பெயர் சோழர்கள் இத்தீவுக்கு வைத்த "நக்கவரம்" என்ற சொல்லில் இருந்து மருவியிருக்கிறது. இது தஞ்சாவூரில் இருந்து பெறப்பட்ட 1050 ஆண்டு கல்வெட்டுகளின் மூலம் அறியக்கிடக்கிறது.
                                        இத்தீவுகளில் ஐரோப்பியர்களின் திட்டமிடப்பட்ட குடியேற்றம் 1754/56 ஆம் ஆண்டுகளில் தானிய கிழக்கிந்தியக் கம்பனியின் வருகையுடன் ஆரம்பிக்கிறது. இக்கம்பனி அப்போது தரங்கம்பாடியில் "பிரெடெரிக்சோர்ன்" என்ற பெயரில் நிர்வாகம் செய்யப்பட்டு வந்தது. மரோவியன் திருச்சபையைச் சேர்ந்த மதப்பரப்புனர்கள் இத்தீவுகளின் நன்கவுரி என்ற இடத்தில் முதலில் குடியேறினர். ஆனாலும் மலேரியா மற்றும் பல்ல்வேறு தொற்று நோய்களினால் இவர்களில் பலர் இறக்கவே இங்கு குடியேற்றம் பல முறை இடைநிறுத்தப்பட்டது. டென்மார்க் இங்கு குடியேற்றத்தை நிறுத்தி விட்டதாக தவறாக அனுமானித்து 1778 - 1783 காலப்பகுதியில் ஆஸ்திரியா இங்கு குடியேற முயற்சித்தது. கடைசியாக 1868 ஆம் ஆண்டு அக்டோபர் 16 இல் டென்மார்க்கின் காலனித்துவம் இங்கு முடிவுக்கு வந்தது. அப்போது தானியர்களின் உரிமை பிரித்தானியர்களுக்கு விற்கப்பட்டது. 1869 ஆம் ஆண்டில் இருந்து இத்தீவுகள் பிரித்தானிய இந்தியாவின் கீழ் ஆளப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது 1942 முதல் 1945 வரை இத்தீவுகள் சப்பானின் முற்றுகைக்கு உள்ளாயிருந்தது. 1950 இல் அந்தமான் தீவுகளுடன் சேர்த்து இந்தியாவின் ஒன்றியப் பகுதியாக ஆக்கப்பட்டது. 2004 டிசம்பர் 26 ஆம் நாள் இடம்பெற்ற இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கத்தின் போது எழுந்த ஆழிப்பேரலை காரணமாக நீக்கோபார் தீவுகளில் பலத்த சேதம் ஏற்பட்டது. அந்தமான் நிக்கோபார் தீவுகளில் மட்டும் 6,000 பேர் வரை கொல்லப்பட்டனர். தெரேசா தீவு இரண்டாக பிரிந்தது. திரிங்கட் தீவு மூன்றாகப் பிளந்தது. 2005, ஜூலை 24 இல் இங்கு 7.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதியப்பட்டது. நிக்கோபார் தீவுகள் இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஒன்றியப் பகுதியின் கீழ் நிருவகிக்கப்பட்டு வருகிறது. அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகர் தெற்கு அந்தமான் தீவில் உள்ள போர்ட் பிளேர் நகரம். யூனியன் பகுதி வடக்கு மற்றும் நடு அந்தமான் மாவட்டம், தெற்கு அந்தமான் மாவட்டம், மற்றும் நிக்கோபார் மாவட்டம் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. நிக்கோபார் தீவுகளுக்குச் செல்பவர்கள் சிறப்பு அனுமதிச் சீட்டு (Tribal Pass) பெற வேண்டும். பொதுவாக, இந்தியரல்லாதோர் கம்பெல் விரிகுடா தவிர நிக்கோபார் தீவுகளின் எப்பகுதிக்கும் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.
                                        பாம்பன் தீவு (Pamban Island) என்பது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாக்கு நீரிணையில் அமைந்துள்ள ஒரு தீவு. இந்தியாவைச் சேர்ந்த இத்தீவு தமிழ்நாடு மாநிலத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. சுற்றுலா மற்றும் இந்துக்களின் புனிதத் தலமாக உள்ள இராமேஸ்வரம் இத்தீவின் முக்கிய நகரம் ஆகும். பாம்பன் தீவின் அகலம் பாம்பன் நகரப்பகுதியின் மேற்கில் இருந்து தனுஷ்கோடியின் தெந்கிழக்கு வரை கிட்டத்தட்ட 30 கிலோமீட்டர்கள் ஆகும். நீளம் தனுஷ்கோடி முதல் இராமேஸ்வரம் வரை 2 கிமீ முதல் 7 கிமீ வரை பரந்துள்ளது. பாம்பன் தீவு இராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு தாலூகா ஆகும். இது ஓகரிசல்குளம், மாஹிந்தி, பாம்பன், இராமேஸ்வரம் என நான்கு நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இங்கு இரண்டு நிர்வாக கிராமங்கள் உள்ளன. அவை: பாம்பன், இராமேஸ்வரம் என்பவை. இவை இரண்டும் இத்தீவின் முக்கிய நகரங்கள் ஆகும். இவ்விரு நகரங்களிலும் தொடருந்து நிலையங்களும் உள்ளன. இவற்றைவிட தங்கச்சிமடம், இராமர்படம் (Ramarpadam) என இரண்டு சிறிய குடியேற்றக் கிராமங்களும் உள்ளன. பாம்பன் தீவின் நிர்வாகத் தலைமையகம் இராமேஸ்வரத்தில் உள்ளது. இராமேஸ்வரம் பாம்பன் நகரில் இருந்து 11 கிமீ தூரத்திலும், தனுஷ்கோடியில் இருந்து 18 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது.
                                       சாகோஸ் தீவுக்கூட்டம் (Chagos Archipelago) என்பது இந்தியப் பெருங்கடலின் நடுவில் அமைந்துள்ள தீவுக்கூட்டம் ஆகும். இவை முன்னர் எண்ணெய்த் தீவுகள் (Oil Islands) என அழைக்கப்பட்டன. இவை தமிழில் பேகான தீவுகள் என்றும் திவெயி மொழியில் ஃபேகண்தீபு எனவும் அழைக்கப்படுகின்றன. இவற்றில் கிட்டத்தட்ட 60 சிறு வெப்பவலயத் தீவுகளைக் கொண்ட ஏழு பவளத்தீவுக் கூட்டங்கள் (atolls) உள்ளன. பேகான தீவுகள் மாலைதீவுகளில் இருந்து தெற்கே 500 கிமீ (300 மைல்கள்) தூரத்திலும், இந்தியாவில் இருந்து தென்மேற்கே 1600 கிமீ (1000 மைல்) தூரத்திலும், தான்சானியாவுக்கும், ஜாவாவிற்கும் இடைநடுவீல் அமைந்துள்ளன. இப்பகுதி அதிகாரபூர்வமாக பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலத்தைச் சேர்ந்ததாகும். கிட்டத்தட்ட ஒன்றரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக இங்கு சாகோசிய மக்கள் வாழ்ந்து வந்தனர். பின்னர் பிரித்தானியரும் அமெரிக்கரும் 1960களில் இவர்களை விரட்டிவிட்டு இங்குள்ள மிகப் பெரிய தீவான டியேகோ கார்சியாவில் அமெரிக்க இராணுவத் தளம் ஒன்றை அமைத்தனர். இத்தீவுகளின் மொத்த நிலப்பரப்பு 63.17 கிமீ² ஆகும். டியேகோ கார்சியா தீவின் பரப்பு 27.20 கிமீ². இவற்றின் மொத்தப் பரப்பளவு (வளைகுடாக்கள் உள்ளிட்டவை) 15,000 கிமீ² ஆகும். இங்குள்ள ஏழு பெரிய தீவுகள்:
டியேகோ கார்சியா (Diego Garcia) டியேகோ கார்சியா இந்தியப் பெருங்கடலின் தென்முனையிலுள்ள பெரிய தீவு; இந்தியாவிலிருந்து 1000 மைல்களுக்கு அப்பாலுள்ளது. பிரிட்டிஷாருக்குச் சொந்தமான இத்தீவில் இப்பொழுது அமெரிக்க விமான மற்றும் கடற்படைப் பிரிவுகள் செயல்படுகின்றன. இங்கிருந்தும் வளைகுடாப் போர், ஆப்கானிஸ்தான் மீதான விமானத்தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. சி.ஐ.ஏவின் சில வேலைகளுக்கும் இத்தீவு உபயோகப்படுத்தப்படுகிறதாம்.
எக்மொண்ட் தீவுகள் (Egmont Islands)
பெரோஸ் கரை (Peros Banhos)
சாலொமன் தீவுகள், (Salomon Islands)
பெரும் சாகோஸ் கரை (Great Chagos Bank)
பிளென்ஹைம் பாறை (Blenheim Reef)
பேச்சாளர் கரை (Speakers Bank)

கண்டம் (Continent)

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
                   கண்டம் (Continent) எனப்படுவது தொடர்ச்சியான மிகப்பெரிய நிலப்பரப்பைக் குறிக்கும். பூமி ஏழு கண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
கண்டங்கள்.
1.ஆப்பிரிக்க-யூரேசியா(Afro-Eurasia, Afrasia அல்லது Eurafrasia) என்பது யூரேசியா, ஆப்பிரிக்கா ஆகிய இரு கண்டங்கள் இணைந்த ஒரு கண்டத்தைக் குறிக்கும் சொல்லாகும். இணைந்த இக்கண்டத்தின் மொத்த நிலப்பகுதியும் 5.7 பில்லியன் மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. இது உலகின் மொத்த மக்காள்தொகையில் 85 விழுக்காடு ஆகும். பொதுவாக, ஆப்பிரிக்க யூரேசியா என்ற இக்கண்டம் ஆப்பிரிக்காவையும் யூரேசியாவையும் சூயஸ் கால்வாய் வழியே பிரிக்கிறது. யூரேசியா என்பது மேலும் ஐரோப்பா, மற்றும் ஆசியா எனப் பிரிக்கப்பட்டுள்ளது.

                                      வரலாற்று மற்றும் கலாச்சார ரீதியாக ஆப்பிரிக்க-யூரேசியா என்பது யூரேசியா-வடக்கு ஆப்பிரிக்கா, மற்றும் சகாரா ஆப்பிரிக்கா என்றவாறும் பிரிக்கப்படுகிறது. பழைய உலகம் (Old World) என்பது ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா மற்றும் இவற்றின் நிலப்பகுதிகளை சாராத அவற்றைச் சூழவுள்ள தீவுகளை உள்ளடக்கியதாகும். நிலவியல் ரீதியாக, ஆப்பிரிக்கா ஐரோப்பாவுடம் மோதுகைக்குள்ளாகும் போது ஆப்பிரிக்க-யூரேசியா ஒரு பெருங்கண்டமாக (supercontinent) உருவாகும். இந்நிகழ்வு ஸ்பெயினின் தென்முனை ஆப்பிரிக்காவை அடையும் போது, அதாவது இன்னும் 600,000 ஆண்டுகளில் நிகழக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு இடம்பெறும் போது, மத்தியதரைக் கடல் அத்திலாந்திக் பெருங்கடலில் இருந்து பிரிந்து விடும். இன்னும் 50 மில்லியன் ஆண்டுகளில் ஆப்பிரிக்கா முற்றாக ஐரோப்பாவுடன் மோதி, மத்தியதரையை முற்றாக மூடி புதிய மலைத்தொடர்களை உருவாக்கும்.
                                                 யூரேசியா
என்பது சுமார் 53, 990,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட மிகப் பெரியதொரு நிலப் பகுதி. இது புவி மேற்பரப்பின் 10.6 விழுக்காடு ஆகும். இது ஆசியா, ஐரோப்பா ஆகிய கண்டங்களுடன் மத்திய கிழக்குப் பகுதியையும் உள்ளடக்குகின்றது. யூரேசியா என்னும் இந்தக் கருத்துரு மிகப் பழையது எனினும் இதன் எல்லைகள் தெளிவானவை அல்ல. யூரேசியா, இதைவிடப் பெரிய நிலத்திணிவான ஆபிரிக்கா-யூரேசியாவின் ஒரு பகுதியாகும். யூரேசியா, உலக மொத்த மக்கள் தொகையின் 69% ஆன 4.6 பில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டதாகும். துப்பாக்கிகள், கிருமிகள், மற்றும் உருக்கு (Guns, Germs, and Steel) என்னும் தலைப்பிலான நூலை எழுதிய ஜாரெட் டயமண்ட் (Jared Diamond) என்பார், உலக வரலாற்றில் யூரேசியாவின் மேலாதிக்கம், அதன் கிழக்கு-மேற்கு விரிவு, காலநிலை வலயங்கள், வீட்டு வளர்ப்பிற்கு ஏற்ற இப் பகுதியின் தாவரங்கள், விலங்குகள் முதலியவற்றைக் காரணமாகக் காட்டுகிறார். வரலாற்றுக் காலகட்டங்களில் யூரேசியாவின் பல்வேறு பண்பாடுகளை இணைத்ததன் மூலம் இப்பகுதியில் வணிகம், பண்பாட்டுப் பரிமாற்றம் ஆகியவற்றின் குறியீடாகப் பட்டுப் பாதை விளங்குகிறது. பழங்கால ஆசிய ஐரோப்பியப் பண்பாடுகள் இடையேயான மரபியல், பண்பாட்டு, மொழியியல் தொடர்புகளை ஆராயும் நோக்கில் பெரிய யூரேசிய வரலாறு என்னும் எண்ணக்கரு அண்மைக் காலங்களில் உருவாகியுள்ளது. இவையிரண்டும் நீண்ட காலமாக வேறுபட்ட தனித்தனியானவை ஆகவே கருதப்பட்டு வந்துள்ளன. யூரேசியா சுமார் 325 - 375 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவாகியதாகக் கருதப்படுகின்றது. ஒரு காலத்தில் தனியான கண்டமாக இருந்த சைபீரியா, கசாக்ஸ்தானியா, பால்டிக்கா என்பவை இணைந்த பொழுது இது உருவானது. சீனப் பகுதி சைபீரியாவின் தெற்குக் கரையுடன் மோதியது. பால்ட்டிக்கா என்பது முன்னர் லோரெந்தியா என்று அழைக்கப்பட்ட இன்றைய வட அமெரிக்காவுடன் இணைந்து இருந்தது. இது யூரமெரிக்கா எனப்படுகின்றது.
2.ஆசியா கண்டம் உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட கண்டமாகும். இது யுரேசியா நிலப்பரப்பின் ஒரு பகுதியாகும். உலகின் மக்கள்தொகையில் ஏறத்தாழ 60 சதவீதம் பேர் இக்கண்டத்திலேயே இருக்கின்றனர்.
கோண்டுவானா (Gondwana, ɡɒndˈwɑːnə)), என்பது வரலாற்றுரீதியாக பெருங்கண்டத்தின் தெற்குப் பகுதிக்குக் கொடுக்கப்பட்ட பெயர். 570 - 510 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இக்கண்டம் நிலவியல் ரீதியாக மூடத் தொடங்கியது. இதன் மூலம் கிழக்கு மற்றும் மேற்கு கோண்டுவானாக்கள் இணைந்தன. 180 - 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பாஞ்சியா என்ற ஒரு நிலம் இரண்டாகப் பிரிந்த போது கோண்டுவானாவும் லோரேசியாவில் இருந்து பிரிந்தது. லோரேசியா என்ற வடக்கு-அரைப்பகுதியின் கண்டம் மேலும் வடக்கே நகர்ந்தபோது கோண்டுவானா தெற்கே நகர ஆரம்பித்தது. கோண்டுவானா இன்றைய ஆப்பிரிக்கா, கடகத் திருப்பத்திற்கு தெற்கில் உள்ள இந்தியத் துணைக்கண்டம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அண்டார்க்டிக்கா, மடகஸ்கார், அரேபியா ஆகிய பரந்த நிலப்பரப்பைக் கொண்டிருந்தது. நண்ணிலக்கடல் ஆசியாவை ஊடறுத்ததுச் சென்று பசிபிக் பெருங்கடலுடன் சேர்ந்திருந்தது. ஆனால் இமயமலை தொடர் அன்று கடலுக்குள் முழ்கி இருந்தது. ஒரு காலத்தில் புவியில் நிலப்பகுதி 7 கண்டங்களாக இருந்ததாக தெரிகிறது. அவை ஒன்றில் இருந்து ஒன்று தனித்து இருந்தால் தீவுகள் எனப்பட்டன. அவை பெருநிலப் பகுதிகள் என்பதால் தீபம் என்று சொல்லப்பட்டது. ஒவ்வொரு தீவும் தாவரத்தால் நிறைந்து ஒரு மாபெரும் சோலை போல் தோன்றியது. இதனால் பொழில் எனப்பட்டது. இதனாலேயே இந்திய நிலப்பகுதி நாவந்தீவு என்றும், நாவலந் தண் பொழில் என்றும் அழைக்கப்பட்டது. ஒரு காலத்திதல் இந்தியாவுடன் இணைநதிருந்து இந்தியப் பெருங்கடலில் முழ்கிப் போன பெருநிலப்பகுதியை பழந்தமிழ் நூல்களும், இக்கால தமிழ் அறிஞர்களும் குமரிக்காடு அல்லது கமரிக் கண்டம் அல்லது பழம்பாண்டிநாடு என்று குறிப்பிடுகின்றனர். அதனை லெமுரியா கண்டம் என்றும், கோண்டுவானா என்றும்;, மேலை நாட்டு ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உயிர்களின் தோற்றத்திற்குரிய முலத்தாயகத்தை - கடலுள் சிறிதளவு முழ்காதிருந்த மிகப் பரந்த கண்டத்தை அவர்கள் அவ்வாறு குறிப்பிட்டர்கள் எனலாம்.
                       லெமுரியா கண்டத்தில் நிலைப்பேற்றை இக்கால ஆய்வாளர்கள் உறுதி செய்கின்றனர். அதை உயிர்களின் தோற்றத்திற்குரிய இடமாக ஊகம் செய்கின்றனர். அவ்விடம் தென்னிந்தியாவின் நிலப்பகுதியை ஒட்டி கடலில் இருந்தது. இவ்வாறு கூறுவதில் இருந்தும், அதனுள் அழிந்த நாகரீகம் பற்றியும் கொண்டிருந்த நம்பிக்கை வரலாற்று நிகழ்வை ஒட்டியதே அன்றி கற்பனை அன்று என உறுதியாகக் கூற முடிகின்றது. லெமுரியாவின் நிலைப்பேற்றை பல்துறை ஆய்வாளர்களும் தத்தம் ஆய்வு முடிவுகளைக் கண்டு உறுதிபடுத்துகின்றனர். உயிரினங்கள் தோன்றுவதற்கு முன்போ, தோன்றும் காலத்திலோ கோண்டுவானா கண்டம் சிதைவுறத் தொடங்கியது என்கின்றனர். மனிதனுக்கு முன்னோடியான குரங்கு மனிதன் தோன்றிய காலத்தில் லெமுரியா அழிவு எய்த தொடங்கியது என்கின்றனர். ஒரு தலைசிறந்த நாகரீகமே குமரி கண்டத்தில் முழ்கிவிட்டது என்று பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன. உயிர்களின் தோற்றம்,வளர்ச்சி, நாகரீகத் தொடக்கம் ஆகியன ஒரு கண்டத்தில் இருந்து தொடங்குவதை ஆய்வாளர்களின் கூற்றுக்கள் தெளிவாக உணர்த்துகின்றன. கடலுள் முழ்கிய கண்டத்தில் இன்றைய நாககரீகத்திற்கு இணையான நாகரீகம் செழித்திருந்தது என்று இசுக்காட்டு எலியட்டு, கார்வே போன்ற மேலைநாட்டு ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உயிர் வகைகள் பெருகுவதற்கு ஏற்ற தட்பவெப்ப சூழ்நிகைளை நிலநடுக்கோட்டுப் பகுதி சிறப்பாக பெற்றுள்ளது. உயிர் திரளில் வகை மிகுதிக்கும், செழித்த வளர்ச்சிக்கும், எண்ணிக்கைப் பெருக்கத்திற்கும் நடுக்கோடடுப் பகுதியே தலைசிறந்து நிற்கின்றது உலகில் மிக வடக்கில் உள்ள நாடுகளில் மரங்கள் 5;அடி உயரத்தில் வளர்வது அரிதாக இருக்கின்றது. தென்னிந்தியா போன்ற நடுக்கோட்டுப்பகுதியில் 100, 120, அடி உயரமுள்ள மரங்கள் உள்ளன. இதனைக் கூட தமிழர் ; புல் ; என்றே அழைக்கின்றனர். அறிவியலாளர் முடிவின்படி தென்னிந்தியா, இலங்கை என்பன பெரும்பாலும் கருங்கல் பாங்காகவே இருக்கின்றன. இவற்றில் உள்ள பாறைகள் தீவண்ணப்பாறை வகையைச் சேர்ந்தவை. இதுவே முதலில் கோதிக்கிற நெருப்புக் குழம்பாக இருந்து பின் இறுகிய பாறையாகி இருக்கும் எனவே இதில் இருந்து உயிரினங்கள் தோன்றுவதற்கு முந்தைய காலம் தொட்டே., தென்இந்தியா நிலப்பகுதியாகவே இருந்தது என்பது தெளிவாகின்றது. இதற்கு நேர்மாறாக வட இந்தியா, இமயமலைப் பகுதி மற்றும் பிற ஆசிய பகுதிகள் ஆகியவற்றில் இருக்கும் மண், பாறைகளில் இயல்பை பார்த்தால் அவை மிகவும் பிற்பட்டவை என்பதை அறியலாம்.
                        வடஇந்திய பகுதிகளின் நிலத்தில் எத்தகைய ஆழத்திலும் கருங்கல் நிலத்தைக்காண முடியாது. ஏனெனில் அப்பகுதி முழுமையும் உண்மையில் பல்லாயிரம் ஆண்டுகளாக சிந்து, கங்கை ஆறுகள் அடித்துக் கொணர்ந்த வண்டல் மண்ணால் ஏற்பட்டதே ஆகும். இதில் இருந்து சற்று பழைமையான இமயமலை, உலக வரலாற்றின் மிகப் பிந்தைய நாள் வரையில் கடலுள் அமிழ்ந்தே இருந்தது. அதில் இன்றும் காணப்படும் கடல் சிப்பிகளும், நண்டு முதலான கடல் உயிர்களின் எலும்புக்கூடுகளும், சுவடுகளும் இந்த உண்மைக்கு சான்றாக இருக்கின்றன. மேலும், வடஇந்திய பகுதிகளில் உள்ள நில நடுக்குகளில் செடி, கொடிவகை உயிரினங்களின் சுவடுகள் காணப்படுகிறது. அவையும் மிகப் பழைய உயிர்வகைகளாக இல்லை. இவற்றுக்கு மாறாக, தென்னிந்தியாவில் உள்ள பாறைகளின் அடிப்பகுதிகளில் உயிர் வகைக்கே இடமில்லாத கருங்கல் அல்லது நெருப்பு வண்ணக்கல் காணப்படுகிறது. அதன் மேற்பகுதிகளில் மிகப்பழைய செடி, கொடிகளின் வளர்ச்சி முறைப்படி காணப்படுகின்றன. ஆப்பிரிக்க கண்டமும், இந்தியாவும் பெரிதும் ஒத்திருப்பதில் இருந்து லெமுரியாகண்டம் ஆப்பிரிக்காவையும், இந்தியாவையும் இணைத்திருக்க வேண்டும். கிழக்கிந்திய தீவுகளும், ஆஸ்திரேலியாவும் ஒத்திருப்பதில் இருந்து லெமுரியா கண்டம், ஆஸ்திரேலியா வலை ஒரு காலத்தில் பரந்து இருந்திருக்க வேண்டும், பசிபிக் தீவுகள் வட அமெரிக்காவவின் கலிபோர்னியா பகுதியுடன் ஒற்றுமை உடையவையாக இருப்பதால் அதனை வெமு:ரியா ஒரு வகையில் உள்ளடக்கி இருந்தது என்பவை விளங்கும். லெமுரியா கண்டத்தில் முலமாக பெர்மியன், மயோசின் காலங்களில் இந்தியாவுடன் ஆப்பிரிக்கா இணைக்கப்பட்டிருந்தது. பலயோசாயிக் காலங்களில் ஆஸ்திரேலியாவுடன் அது இணைக்கப்பட்டிருந்தது என்று கருதப்படுகிறது. இந்தியாவின் மேற்குக் கரையில் இருந்து ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள சீசெல்சு, மடக்காசுக்கர், மொரீசியசு வரைக்கும் இலச்சத்தீவுகள், மாலத்தீவு, சாகோசுத்தீவுகள், சாயாதேமுல்லா, ஆதசுக்கரைஆகியவை உள்பட பல பவழத்தீவுகளும், மணல் மேடுகளும் காணப்படுகின்றன. இவற்றுள் சீசெல்சைச் சுற்றி நெடுந்தொலைவு கடல் 30 அல்லது 40 பாகம் ஆழத்திற்கு மேல் இல்லை என்றும், அதன் அடியிலுள்ள நிலம் தட்டையான, அகன்ற மணல் மேடே என்றும் டார்வின் குறிப்பிடுகின்றார்.
3.ஆப்பிரிக்கா கண்டம் உலகின் இரண்டாவது மிகப்பெரிய மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட கண்டம் ஆகும்.இக்கண்டத்தின் 54 நாடுகளில் மொத்தம் 80 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.
அமெரிக்காக்கள்(Americas, அல்லது அமெரிக்கா),எனப்படுபவை மேற்கு அரைப்பகுதி அல்லது புதிய உலகம் ஆகியவற்றில் உள்ள நிலப்பகுதிகள் ஆகும். இவற்றில் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களும் மற்றும் அவற்றைச் சூழவுள்ள தீவுகள் மற்றும் நிலப்பகுதிகள் உள்ளடங்கியுள்ளன. அமெரிக்கா என்ற சொல் ஒரு பொதுவான சொல்லாக இருந்தாலும், இது ஐக்கிய அமெரிக்காவையே பொதுவாகக் குறிப்பிடுவர். உலகின் மொத்த பரப்பளவில் 8.3% (28.4% நிலப்பரப்பையும்) அமெரிக்காக்கள் கொண்டுள்ளன. உலக மக்கள் தொகையில் இங்கு ஏறத்தாழ 13.5% மக்கள் இங்கு வசிக்கின்றனர். கோண்டுவானா என்ற பெருங்கண்டத்தின் மேற்குப் பகுதியில் இருந்து தென்னமெரிக்கா ஏறத்தாழ 135 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்து தனியே ஒரு கண்டமானது. 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் கரிபியன் தட்டு, பசிபிக் தட்டு ஆகியவற்றின் மோதலினால் பல எரிமலைகள் எல்லைகளிலே வெளிக்கிளம்பி பல தீவுகளை உருவாக்கியது. நடு அமெரிக்காவின் தீவுக்கூட்டங்களின் இடைப்பட்ட பகுதிகள் தொடர் எரிமலை வெடிப்புகளினால் கிளம்பிய பொருட்களால் நிரம்பி புதிய நிலப்பகுதியை உருவாக்கியது. 3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வரை வட அமெரிக்கா, மற்றும் தென்னமெரிக்கா கண்டங்கள் பனாமா பூசந்தியினால் (Isthmus of Panama) இணைக்கப்பட்டு, அதன்மூலம் அமெரிக்காக்கள் என்ற தனி நிலப்பகுதி உருவானது.அமெரிக்க கண்டங்களில் ரோமானிய மொழிகளை பேசும் பகுதி இலத்தீன் அமெரிக்கா என்றழைக்கப்படும். பொதுவாக எசுப்பானியம் மற்றும் போர்த்துக்கீசம் பேசும் நாடுகள் இலத்தீன் அமெரிக்கா என்றழைக்கப்பட்டன. மெக்சிகோ, நடு அமெரிக்கா, தென் அமெரிக்கா, மற்றும் கரிபியக் கடலில் கியூபா, டொமினிக்கன் குடியரசு ஆகிய தீவு நாடுகளும் அமெரிக்காவின் புவேர்ட்டோ ரிக்கோ பொதுநலவாயமும் இலத்தீன் அமெரிக்காவில் உள்ளன.
ஒருநிலக் கொள்கைஅல்லது ஒருதரைக் கொள்கை என்பது ஏறத்தாழ 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், இன்று உலகில் உள்ள எல்லாக் கண்டங்களும், தரைநிலப்பகுதிகளும் தொடர்பறா ஒருபெரு நிலமாக சேர்ந்து ஒன்றாக இருந்ததெனக் கொள்ளும் கொள்கை ஆகும். இந்த ஒருபெரும் தரைநிலத்தைச் சூழ்ந்து ஒரேயொரு மாபெரும் கடல் மட்டும்தான் இருந்தது. எனவே அன்றைய நில உருண்டையில், ஒரேயொரு தரைநிலமும், ஒரேயொரு பெருங்கடலும்தான் இருந்தது என்று இக் கொள்கை கூறுகின்றது. மண் நிலம் எல்லாம் என்னும் பொருள் பட கிரேக்க மொழியின் Παγγαία (பான் 'கையா, pangaea) என்னும் சொல்லை இம்மாபெரும் ஒரு கண்டத்துக்கு ஆல்ஃவிரட் வேகனர் (Alfred Wegener) என்னும் ஜெர்மன் நாட்டுக்காரர் 1920களில் இட்டார். இந்த ஒருநிலத்தைத் தமிழில் முழுமண் என்று அழைக்கப்படும். இந்த முழுமண்ணைச் சூழ்ந்திருந்த மாபெரும் ஒருபெருங்கடலுக்கு முழுக்கடல் அல்லது முழுஆழி (Panthalassa) என்று பெயர். முழுமண்ணானது பிறைநிலா வடிவில் அமைந்திருந்தது. இக்கருத்தினைப் படத்தில் காணலாம். பின்னர் நில உருண்டையின் புற ஓடுகள் பிரிந்து பல்வேறு கண்டகளாக ஆனதை கருத்துருவாக  காணலாம். 
4.வட அமெரிக்கா ஒரு கண்டமாகும். கனடா, ஐக்கிய அமெரிக்கா, மெக்சிகோ, கியூபா ஆகியவை இந்த கண்டத்தில் உள்ள நாடுகளுள் சில. இக்கண்டமானது வடக்கே ஆர்க்டிக் பெருங்கடலாலும் கிழக்கே வட அட்லாண்டிக் பெருங்கடலாலும் மேற்கே பெருங்கடலாலும் தெற்கே கரீபியன் கடலாலும் சூழப்பட்டுள்ளது. இது பரப்பளவில் மூன்றாவது பெரிய கண்டமாகும். மக்கள் தொகை அடிப்படையில் நான்காவது பெரிய கண்டமாகும். இதன் பரப்பளவு 24,230,000 சதுர கிலோ மீட்டர்களாகும். 2001-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இதன் மக்கள்தொகை 454,225,000.5.தென் அமெரிக்கா ஒரு கண்டம். இக்கண்டத்தின் மேற்கில் பசிபிக் மாக்கடலும், தெற்கில் அன்டார்ட்டிகா பனிகண்டமும், கிழக்கில் அத்லாந்திக் மாக்கடலும் , வடக்கில் வட அமெரிக்கக் கண்டமும் உள்ளன. இது உலகின் தென்பாதி உருண்டைப் பகுதியில் அமைந்த கண்டமாகும். ஆஸ்திரேலியாவும், அன்டார்டிகா பனிக்கண்டமும், இத்தென் அமெரிக்காவுமே நிலவுருண்டையின் தென் பாதியில் அமைந்த பெரு நிலப்பகுதிகள். இப்படி நில உருண்டையின் தென்பாதிப் பகுதியில் இத்தென் அமெரிக்காவுக்கு நேர் பின்னுள்ள இன்னொரு நாடு அவுஸ்திரேலியா ஆகும். தென் அமெரிக்கா 17.8 மில்லியன் சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. தென் வடலாக (தெற்கு-வடக்காக) சுமார் 7,600 கி.மீ தொலைவும், கிழக்கு-மேற்காக (கீழ் மேலாக) ஏறத்தாழ 5,300 கி.மீ. அகலமும் உடையது இக்கண்டம். மேற்குலகிலேயே யாவற்றினும் மிக மிக உயரமான அக்கோன்காகுவா மெருமலை இக்கண்டத்தின் அர்ஜென்டினா நாட்டில் உள்ளது. இமய மலைக்கு அடுத்தாற்போல் மிக உயர்ந்த இம்மலை 6,960 மீ. உயரம் உடையது. இக்கண்டத்தில் உள்ள 12 தனிநாடுகளில் சுமார் 300 மில்லியன் மக்கள் வசிகிறார்கள் (1991ன் கணக்குப் படி). இக் கண்டத்திலே மிகப்பெரும்பாலோர் இலத்தீன் மொழிவழி தோன்றிய ஸ்பானிய மொழி பேசுவதால், இத் தென் அமெரிக்காவை. இலத்தீனிய அமெரிக்கா என்றும் அழைக்கப்படுகின்றது. பிரேசில் நாட்டில் போர்ச்சுகீசிய மொழி பேசப்படுகிறது.
அண்டார்க்டிக்கா (Antarctica) பூமியின் தென் முனையைச் சூழ்ந்திருக்கும் ஒரு கண்டமாகும். பூமியிலேயே மிகவும் குளிர்ந்த பகுதி இதுவாகும். மேலும் கண்டம் முழுவதும் ஏறக்குறைய பனிக்கட்டியினால் மூடப்பட்டுள்ளது. புவியில் உள்ள நன்னீரில் கிட்டத்தட்ட 70 வீதமானது இங்கேயே உள்ளது. புவி வெப்பமாதலினால் இங்குள்ள பனி உருகிவருகின்றது. இதன் மூலம் கடல் நீர் மட்டம் உயர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
6.ஐரோப்பா கண்டம் யுரேஷியாவின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது. இது புவியியல் அமைப்பின் படி ஒரு தீபகற்பமாகும். இதன் எல்லைகளாக வடக்கே ஆர்க்டிக் பெருங்கடலும் மேற்கே அட்லாண்டிக் பெருங்கடலும் தெற்கே மத்தியதரைக் கடலும் கிழக்கே கருங்கடலும் உள்ளன. ஐரோப்பாக் கண்டம், பொருளாதார வகையில் பிற கண்டங்களை காட்டிலும் வளர்ச்சியடைந்த பகுதியாகும். ஐரோப்பாவின் கிரீசு நாடே மேற்கத்திய பண்பாட்டின் பிறப்பிடமாக கருதப்படுகிறது. ஐரோப்பா உலனின் ஏழு கண்டங்களில் பரப்பளவில் 10,180,000 ச.கி;மீகள் இரண்டாவது சிறிய கண்டமாகும். இது உலகின் மொத்த பரப்பளவில் 2% மற்றும் உலகின் நிலப்பரப்பளவில் 6.8 % ஆகும். உருசியா நாடு ஐரோப்பா கண்டத்தில் மிகப்பெரிய நாடாகும். வாடிகன் சிட்டி மிக சிறிய நாடாகும். இதன் மொத்த மக்கள் தொகை 731 மில்லியன் (கிட்டதட்ட 73 கோடிகள்). மக்கள் தொகை பரவலில் ஆசியா ஆப்பிரிக்கா விற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் உள்ளது. இது உலகின் மொத்த மக்கள் தொகையில் 11% ஆகும். ஆனால் ஐக்கிய நாடுகளின் கணிப்பின்படி இதன் மக்கள் தொகை 2050ல் 7% குறைய வாய்ப்புள்ளது. 16ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து உலக நிகழ்வுகள் மற்றும் போக்கை நிர்ணயிக்கும் முக்கிய சக்தியாக உள்ளது. 17ம் நூற்றாண்டு முதல் 20ம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா, பிரான்சு, ஸ்பெயின், போர்த்துகல் உலகின் முக்கியமான கடல்வழி பாதைகளை கண்டறிந்தனர். முக்கிய இடங்களில் கால்வாய்களையும் அமைத்தனர் அதே போல பல தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளும் ஐரொப்பாவில் நிகழ்ந்தன. இதன் விளைவாக பல நாடுகளை பிடிக்கும் ஆவலில் ஆப்பிரிக்கா, ஆசியா , அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா கண்டத்திலுள்ள நாடுகள் ஐரோப்பிய நாடுகளின் காலனிகளாக அவற்றின் ஆளுமையின் கீழ் கொண்டு வந்தனர். 20ம் நூற்றாண்டில் நிகழ்ந்த இரு உலகப்போர்கள் பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளிடையே நடந்தது. இந்த பாதிப்பின் விளைவாக ஐரோப்பாவின் உலக ஆளுமை இக்காலகட்டத்தில் வீழ்ந்தது. 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து சோவியத் ஒன்றியம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா நாடுகள் ஆதிக்க சக்திகளாக வளர்ந்தன. 1991 ல் சொவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட காலகட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியம் உருகாக்கப்பட்டு ஆதிக்க சக்தியாக வளர்ந்து வருகிறது.
ஓசியானியா (Oceania) என்பது பசிபிக் பெருங்கடலையும் அதனைச் சூற்றியுள்ள பகுதியில் அமைந்துள்ள நிலத்தையும் தீவுகளையும் குறிக்கும் புவியியல் பெயராகும். ஓசியானியா என்ற சொல்லை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் பிரெஞ்சு நாடுகாண் பயணியான ஜூல் டூமோன்ட் டேர்வில் என்பவர். இன்று இச்சொல் பல மொழிகளில் கண்டங்களில் ஒன்றை வரையறுப்பட்தற்குப் பயன்படுத்தப்படுகிறது. ஓசியானியாவில் உள்ள தீவுகள் மூன்று வலயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை: மெலனீசியா, மைக்குரோனீசியா, மற்றும் பொலினீசியா.. ஓசியானாவின் எல்லைகள் பல வழிகளில் வரையறுக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பான்மையானவற்றில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, நியூ கினி ஆகியவற்றை உள்ளடக்கிய ஆஸ்திரலேசியா, மலே தீவுக்கூட்டம் ஆகியவை ஓசியானியாவில் அடக்கப்பட்டுள்ளன.
7.ஆஸ்திரேலியா (Australia) என்பது உலகின் மிகச்சிறிய கண்டம் ஆகும். இது பொதுவாக ஆஸ்திரேலியப் பெருநிலத்தையே குறிக்கிறது. இதன் அயலில் உள்ள தீவுகளான டாஸ்மானியா, நியூ கினி போன்றவை இக்கண்டத்தினுள் அடங்காது. ஆனால் நிலவியல் ரீதியாக, கண்டம் என்பது பெருநிலப்பரப்போடு சேர்ந்த தீவுகளையும் உள்ளடக்கும் என்பதால், டாஸ்மானியா, நியூ கினி போன்றவையும் ஆரு தீவுகள் போன்ற அயலில் உள்ள தீவுகளையும் இக்கண்டத்தினுள் அடக்கலாம். இத்தீவுகள் கண்டத் திட்டுகளின் மேல் பரவியுள்ள கடல்களினால் பிரிக்கப்பட்டவை. ஆஸ்திரேலியா, நியூ கினி ஆகியவை அரபூரா கடல், மற்றும் டொரெஸ் நீரிணையாலும், தாஸ்மானியா பாஸ் நீரிணையாலும் பிரிக்கப்பட்டுள்ளன. கிமு 18,000 ஆண்டுகளளவில், கடல் மட்டம் குறைந்திருந்த வேளையில், நிலத்திட்டுகள் அனைத்தும் ஒரே நிலமாக இருந்தது. கடந்த பத்தாயிரம் ஆண்டுகளாக, கடல் மட்டம் உயர்வின் காரணமாக தாழ்நிலப்பரப்புகள் கடலினுள் அமிழ்ந்து இன்றைய பெருநிலப்பரப்பையும், நியூ கினி மற்றும் டாஸ்மானியா என்ற இரண்டு மலைத்திட்டுக்கள் அடங்கிய தீவுகளையும் பிரித்தன. நியூசிலாந்து நாடு ஒரே கண்டத் திட்டில் இல்லாததால், இது ஆஸ்திரேலியா கண்டத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுவதில்லை. மாற்றாக, இது மூழ்கிய கண்டமான சிலாந்தியாவினுள் அடங்கும். சிலாந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இணைந்து ஓசியானியா அல்லது ஆஸ்திரலேசியாவின் பகுதிகளாகும்.

மனித வரலாறு

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
 அனைவருக்கும் அறிவியல்-வலைப்பக்கத்திற்கு தங்களை இன்முகத்தோடு வரவேற்கிறோம்.இந்த பதிவில் உயிரினம் தோன்றியது பற்றி காண்போம். 
                உயிரினங்களின் தோற்றம் (On the Origin of Species) ஆங்கில உயிரியலாளர் சார்ல்ஸ் டார்வின் அவர்களால் 1859 ம் ஆண்டு படிவளர்ச்சிக் கொள்கையை விபரித்து வெளியிடப்பட்ட நூல் ஆகும். உலகின் அறிவியல் நூல்களில் மிக முக்கிய வெளியீடுகளில் ஒன்றாக இது மதிக்கப்படுகிறது. இந்த நூல் படிவளர்ச்சிக் கொள்கையை ஆதாரங்களுடன் விளக்குகிறது. அன்றுவரை உயிர்களின் தோற்றத்தைப் பற்றி சமயத் தொன்மங்களே கருத்துக் கூறின. இந்த நூலின் இயற்கையான விளக்கம் உயிரியல் மரபியல் புரட்சிக்கு வித்திட்டு, உலகை மாற்றியமைத்தது.

                            இழைமணியப் பழையோள் அல்லது இழைமணிய முதற்றாய் என்பது வாழும் மாந்தரின் தாய்வழி மூதாதையர்கள் அனைவருக்கும் பொதுவாக இருந்ததாகக் கருத இடம் தரும் ஒரு பெண் தொன்முது தாயைக் (மூதாயைக்) குறிக்கும் சொற்றொடர். இப்பெண்ணின் இழைமணி மரபுப்பொருளின் (மைட்டோக்கோன்றிய டி.என்.ஏ யின்) ஒரு படியுருதான் வழிவழியாக ஒவ்வொறு தாயிடமிருந்தும் குழந்தைகளுக்குச் சென்று இன்று வாழும் மனிதர்களின் கண்ணறைகளின் உள்ளுறுப்புகளானன இழைமணிகளுக்குள் இருக்கின்றன. பைபிள் கதையில் வரும் ஏவாளின் பெயரைக் கொண்டு இம்மூதாதையப் பெண்ணை Mitochondrial Eve (இழைமணி ஏவாள்) என்றும் ஆங்கிலத்தில் அழைப்பர். இருந்தாலும் இப்பெண் மாந்தரினத்தின் முதற்பெண்ணல்ல, மாறாக தொடர்ச்சியாக வந்த மரபுவழியில் இன்றும் தாய்வழி வழித்தோன்றல்களைக் கொண்ட கடைசிப் பெண் மட்டுமே. இப்பெண் வாழ்ந்த நாட்களில் இருந்த மற்ற பெண்களின் வழித்தோன்றல்கள் ஆண் வழியில் வந்து இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். அதேபோல் இப்பெண்ணின் தாயும் பிற மூதாதையர்களும் வாழ்ந்துள்ளனர். இந்த இழைமணி முதல்தாய் படியுரு ஆணின் ஒய்-நிறப்புரிக்கு (ஒய்-குரோமோசோம்)க்கு இணையான பெண் படிவம். ஆனால் தந்தை வழி வரும் பொது ஆண் படியுரு வேறு காலத்தது (பிற்காலத்தது).இந்தத் தொன்முது தாய் ஏறத்தாழ 170,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, அல்லது ஏறத்தாழ 8,000 தலைமுறைக்கு முன்பு வாழ்ந்த ஒரு பெண்மணி. இக் காலப்பகுதியானது, ஆப்பிரிக்காவை விட்டு மாந்தர்கள் புலம் பெயர்ந்து சென்றதாக கருதப்படும் 60,000 ஆண்டுகள் என்னும் காலக்கணக்குக்கும் முற்பட்ட காலம்.
                                தொல்லுயிர் எச்சம் (Fossil) அல்லது புதைபடிவம் என்பது தாதுப்படுத்தப்பட்ட அல்லது தாதுப்பொருளால் நிரப்பப்பட்ட தாவரங்கள், விலங்குகள் மற்றும் அவற்றின் கால்தடங்கள் ஆகியவற்றைக் குறிக்கும். அவை, மூலக்கூறு உயிரியலாளர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்களை அளிக்கின்றன. சில சமயங்களில் மரப்பிசினில் சிக்கும் சிறு பூச்சிகள் எச்சங்களாகின்றன ( அம்பர்). வாழும் உயிரில பழைய தொல்லுயிர் எச்சங்களை ஒத்து இருப்பின் அவற்றை வாழும் தொல்லுயிர் எச்சங்கள் எனக் குறிப்பிடுவர்.
                                வாழும் தொல்லுயிர் எச்சம் வாழும் உயிரினங்களில் சில பழைய தொல்லுயிர் எச்சங்களை ஒத்து இருப்பின் அவற்றை வாழும் தொல்லுயிர் எச்சங்கள் எனக் குறிப்பிடுவர். இலங்கையில் கண்டி வாவி, தம்பலகாமம் போன்ற பிரதேசங்களில் தொல்லுயிர் எச்சங்களை காணலாம் .
                                தொல்லுயிரியல் என்பது பாறைகளில் பதிவாகியுள்ள பண்டைய தாவரங்கள் மற்றும் விலங்குகளின் தொல்லுயிர்ப் படிவங்களை அடிப்படையாகக் கொண்டு அவற்றின் விருத்தி பற்றி ஆராயும் துறையாகும். இது உடற் படிவங்கள், வழித்தடங்கள் (tracks), வளைகள் (burrows), cast off parts, கழிவுப் படிவங்கள் (fossilized feces) மற்றும் வேதியியல் எச்சங்கள் போன்றவற்றின் ஆய்வுகளையும் உள்ளடக்கும். புவியியலிலும், காலநிலையிலும் ஏற்பட்ட நீண்ட கால இயல்பியல் மாற்றங்கள் எவ்வாறு உயிரினங்களின் படிமலர்ச்சியைப் பாதித்தன, எவ்வாறு வாழ்சூழலியல் முறைமைகள் (ecosystems)இம்மாற்றங்களுக்கு ஏற்றவாறு செயற்பட்டு புவிச் சூழலில் மாற்றங்களை ஏற்படுத்தின, இந்தப் பரஸ்பர மாற்றங்கள் தற்கால உயிரினப்பல்வகைமையில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தின என்பன பற்றி ஆராய்வதன் மூலம், பண்டைக்கால உயிர்வாழ்க்கையை நவீன தொல்லுயிரியல் உரிய சூழலில் அமைத்துக்காட்டுகிறது.
                               தொல்பொருளியல் (Archaeology) என்பது, கட்டிடக்கலை, தொல்பொருட்கள் (artifacts), தொல்லுயிர் எச்சம், மனித மிச்சங்கள், மற்றும் நிலத் தோற்றங்கள் என்பன உள்ளிட்ட எஞ்சிய பொருட்களைக் வெளிக்கொணர்ந்து, ஆவணப்படுத்தி, பகுப்பாய்வு செய்வதன் மூலம் செய்யப்படும் மனிதப் பண்பாடு பற்றிய படிப்பாகும். தொல்பொருளியலின் இலக்குகள் வேறுபடுவதுடன், இதன் நோக்கங்கள், பொறுப்புக்கள் தொடர்பான வாதங்களும் இருந்துவருகின்றன. சில இலக்குகள், வரலாற்றுக்கு முந்திய மற்றும் வரலாற்றுக் கால மனிதப் பண்பாட்டின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் ஆவணப்படுத்தல், அவற்றை விளக்குதல்; பண்பாட்டு வரலாற்றைப் புரிந்து கொள்ளுதல்; பண்பாட்டுப் படிமுறை வளர்ச்சியைக் கால வரிசைப்படுத்தல்; மனித நடத்தைகள் பற்றி ஆய்வு செய்தல் என்பவற்றை உள்ளடக்குகின்றன. தொல்லியலாளர்கள், தங்கள் துறையில் பயன்படுத்தப்படும் முறைகள் பற்றி ஆய்வு செய்வதிலும் கவனம் செலுத்துகின்றனர். அத்துடன், கடந்தகாலம் பற்றிய அவர்களது கேள்விகளில் தொக்கி நிற்கும் கோட்பாட்டு மற்றும் தத்துவம் சார்ந்த அடிப்படைகள் தொடர்பான ஆய்வுகளிலும் அவர்களுக்கு ஆர்வம் உண்டு. புதிய தொல்லியற் களங்களைக் கண்டுபிடித்தல், அவற்றில் அகழ்வாய்வு செய்தல், வகைப்படுத்தல், பகுப்பாய்தல் பேணிக்காத்தல் என்பனவெல்லாம், தொல்லியல் சார்ந்த வழிமுறைகளின் பல்வேறு முக்கியமான கட்டங்கள் ஆகும். இவை ஒருபுறம் இருக்கத் தொல்லியலில் பெருமளவு பல்துறைசார் ஆய்வுகளும் நடைபெறுகின்றன. இதற்காக இது, வரலாறு, கலை வரலாறு, செந்நெறி இலக்கியம், புவியியல், நிலவியல், இயற்பியல், தகவல் அறிவியல், வேதியியல், புள்ளியியல், தொல்பழங்காலச்சூழலியல், தொல்விலங்கியல், தொல்தாவரவியல் போன்ற துறைகளில் தங்கியுள்ளது.
                     பீக்கிங் மனிதன் 250,000 ஆண்டுகளின் முன் வாழ்ந்த மனிதன். இவன் முழுவளர்ச்சியடையாத மனிதக்குரங்கு மனிதன். 1929 இல் பீக்கிங் மனிதனின் மண்டையோட்டுப் புதையுருவம் சீனாவின் பீக்கிங் நகரருகில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனாலேயே இம்மனிதனுக்கு இப்பெயர் வழங்கப்பட்டது.பீக்கிங் மனிதர்கள் கல்லாயுதங்களைப் பயன்படுத்தினர். நெருப்பின் பயனை அறிந்திருந்தனர்.                      நியண்டர்தால்  (Neanderthal, Homo neanderthalensis), ஐரோப்பாவிலும் மேற்கு ஆசியாவின் சில பகுதிகளிலும் வாழ்ந்திருந்த ஹோமோ வகை இனமாகும். முன்-நியாண்டர்தால் குணங்கள் 3,50,000 ஆண்டுகளுக்கு முன்னமே ஐரோப்பாவில் காணப்பட்டது.முழுமையான நியண்டர்தால் குணங்கள் 1,30,000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகிவிட்டிருந்தது.24, 000 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பாவில் இவ்வினம் அழிந்துபோனது. நியண்டர்தால் மனித எச்சங்கள் ஜெர்மனியின் நியண்டர்தால் என்னும் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் இப்பெயரால் அழைக்கப்படுகிறான். இவன் நெருப்பை பயன்படுத்தினான்; குகையில் வாழ்ந்தான்; தோலாடை அணிந்தான்.“நியான்டர்தால் மனிதன், ஆஸ்ட்ராஸோ பித்தேகஸ் போன்றவைகளும் இந்தக் குடும்பத்தின் உறுப்பினர்கள் தானே”
                         ஜாவா மனிதன்என்பது 1981 ஆம் ஆண்டில் இந்தோனீசியாவின், கிழக்கு ஜாவாவில் உள்ள பெங்காவன் சோலோ (Bengawan Solo) ஆற்றங்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட புதைபடிவம் ஒன்றுக்குரிய மனித மூதாதை ஒருவனுக்கு வழங்கப்பட்ட பெயர் ஆகும். ஹோமோ இரெக்ட்டஸ் (Homo erectus) என்னும் உயிரியல் பெயரால் அழைக்கப்படும் இம் மனித மூதாதை தொடர்பில் கிடைத்த மிகப் பழைய தடயங்களில் இதுவும் ஒன்று. இந்த ஆதி மனிதன் 500,000 ஆண்டுகளின் முன் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது. இதனைக் கண்டு பிடித்த இயுஜீன் டுபாய்ஸ் (Eugène Dubois) என்பவர் இவ்வகை மனிதனுக்கு பித்தெகாந்திராப்பஸ் இரெக்ட்டஸ் (Pithecanthropus erectus) என்னும் அறிவியற் பெயரை வழங்கினார். இப்பெயர், நிமிர்ந்த மனிதக் குரங்கு மனிதன் என்னும் பொருள்படக்கூடிய கிரேக்க, இலத்தீன் மொழி வேர்ச் சொற்களில் இருந்து உருவாக்கப்பட்டது. டுபாய்ஸின் கண்டுபிடிப்பு ஒரு முழுமையான மாதிரி அல்ல. இது, ஒரு மண்டையோட்டு மூடி, ஒரு தொடை எலும்பு, சில பற்கள் என்பன அடங்கியது ஆகும். இவை அனைத்துமே ஒரே இனத்துக்கு உரியவைதானா என்பதில் சில ஐயங்களும் எழுப்பப்பட்டு உள்ளன. இது போன்ற ஆனால் இதைவிட முழுமையான இரண்டாவது மாதிரி மத்திய ஜாவாவில் உள்ள சங்கிரான் என்னும் ஊரில் கண்டுபிடிக்கப்பட்டது. 1936 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இம் மாதிரியைத் தொடர்ந்து மேலும் பல இது போன்ற மாதிரிகள் இப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன.
13.7 பில்லியன் ஆமு - உலகின் தோற்றம்
3.2 மில்லியன் ஆமு - லூசி - en:Lucy (Australopithecus)
1.9 மில்லியன் ஆமு - en:KNM ER 1813
பழைய கற்காலம் - (2.5 மில்லியன் - 10,000 ஆமு)
இடைக் கற்காலம் - (11,500 - 10,000 ஆமு)
கருவிகளை செய்து பயன்படுத்தல்: வில், படகு
புதிய கற்காலம் - (10,000 கிமு - )
வேளாண்மைசெப்புக் காலம் - (3,300 கிமு - )
பண்டை நாகரிகங்கள் கிமு 3500 - மெசொப்பொத்தேமியா
கிமு 3150 - பண்டைய எகிப்து
கிமு 2600 - சிந்துவெளி நாகரிகம்
கிமு 2100 - en:Xia Dynasty
கிமு 1000 - பண்டைக் கிரேக்கம்
கிமு 27 - கிபி 476 : ரோமப் பேரரசு
கிபி 150 - கிபி 900 : மாயா நாகரிகம்
634 - 1453 : முஸ்லீம் படையெடுப்புகள் - en:Muslim conquests
1206 – 1368 - மொங்கோலியப் பேரரசு
1450 - அச்சிடல்1543 - அறிவியல் புரட்சி1583 - 1950 : பிரித்தானியப் பேரரசு1750 - தொழிற்புரட்சி
1750 - இந்திய விடுதலை இயக்கம் - en:Indian independence movement
1775 - 1783 - அமெரிக்க புரட்சி
1789 - 1899 - பிரெஞ்சுப் புரட்சி
1880 - 1914 : en:Scramble for Africa
1858 - படிவளர்ச்சிக் கொள்கை
1870 - en:Germ theory of disease
1879 - மின் விளக்கு
1879 - தானுந்து
1898 - அமெரிக்கப் பேரரசு
1914 - 1918 : முதல் உலகப் போர்
1917 - ரஷ்யப் புரட்சி
1929 - 1939 : பெரும் பொருளியல் வீழ்ச்சி
1940 - தகவல்புரட்சி
1939 - 1945 : இரண்டாம் உலகப் போர்
1945 - சீனப் பொதுவுடமைக் கட்சி வெற்றி
1945 - ஐக்கிய நாடுகள்
1945 - அரபு நாடுகள் கூட்டமைப்பு
1951 - ஐரோப்பிய ஒன்றியம்
1953 - டி.என்.எ அமைப்பு
1960 - பசுமைப் புரட்சி1966 - en:Moon landing
1990 - உலகளாவிய வலை
2000 - மனித மரபகராதித் திட்டம்
2001 - செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள்
2002 - ஆபிரிக்க ஒன்றியம்
2004 - தென் அமெரிக்க நாடுகள் ஒன்றியம்
பிரபஞ்சம்-தமிழும்,தமிழரும்
பிரபஞ்ச வரலாறில்,தமிழ் தோன்றியது எப்போது  தமிழர் நாகரிகமும்,சீன நாகரிகமும் உலகின் மிகப் பழமையான இரு நாகரிகங்கள் என்பது வெள்ளிடை மலை.
இந்தியாவும் சீனமும் எவ்வாறு உலகின் செல்வந்த நாடுகளாக விளங்கின.
கி.மு 14 பில்லியன் பெரும் வெடியில் உலகம் தோன்றியது.

கி.மு 6 - 4 பில்லியன் பூமியின் தோற்றம்.
கி.மு. 2.5 பில்லியன் நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம்.முதன் முதலில் தமிழ் நாட்டில் தோன்றியது.தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது.
கி.மு. 470000 இக்கால இந்தியாவின் தமிழ் நாடு,பஞ்சாப் ஆகிய இடங்களில் மனித இனம் சுற்றித் திரிந்தது.
கி.மு. 360000 முதன் முதலாக சைனாவில் யோமோ எரக்டசு நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கி.மு. 300000 யோமோ மனிதர்கள் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் சுற்றித் திரிந்தனர்.
கி.மு. 100000 நியாண்டெர்தல் மனிதன் கிழக்கு ஆப்பிரிக்காவில் தற்கால மனிதனின் மூளை அளவு உள்ள மனிதர்கள் வாழ்ந்தனர். கி.மு. 75000 கடைகி பனிக்காலம். உலக மக்கட் தொகை 1.7 மில்லியன்.
கி.மு. 50000 தமிழ்மொழியின் தோற்றம்.
கி.மு. 50000 - 35000 தமிழிலிருந்து சீன மொழிக் குடும்பம் பிரிவு.
கி.மு. 35000 - 20000 ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க சிந்திய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்ந காலம்.

கி-மு. 20000 - 10000 ஒளியர் கிளைமொழிகள் தமிழிலிருந்து பிரிந்தகாலம் ( இந்தோ ஐரோப்பிய மொழிகள் )
கி-மு. 10527 முதல் தமிழ்ச்சங்கத்தை பாண்டிய மன்னன் காய்கினவழுதி தோற்றுவித்த காலம். 4449 புலவர்கள் கூடினர். முதுநாரை, முதுகுருகு களரியாவிரை முதலிய நூல்கள் இயற்றப்பட்டன.
கி.மு. 10527 - 6100 பாண்டிய மன்னர்கள் காய்கினவழுதி வடிவம்பலம்ப நின்ற நெடியோன், முந்நீர்ப் விழவின் நெடியோன், நிலந்தரு திருவிற் பாண்டியன் செங்கோன், பாண்டியன் கடுங்கோன்.
கி.மு. 10000 கடைகி பனிக்காலம் முற்றுப்பெற்றது.உலக மக்சுள் தொகை 4 மில்லியன். குமரிக்கணடம் தமிழர் 100000.
கி.மு. 6087 கடல் கொந்தளிப்பில் குமரிக் கண்டம் மூழ்கியது.
கி.மு 6000 - 3000 கபாடபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டவன் பாண்டிய மன்னன் வெண்தேர் செழியன். இரண்டாம் தமிழ்ச்சங்கத்தை நிறுவினான். 3700 புலவர்கள் இருந்தனர். அகத்தியம், தொல்காப்பியம் முதலிய இலக்கண ல்கள் எழுந்தன. பாண்டிய மன்னர்கள் செம்பியன் மந்தாதன், மனுச்சோழன், தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் அதியஞ்சேரல், சோழன் வளிதொழிலாண்ட உரவோன், தென்பாலி நாடன் ராகன், பாண்டியன் வாரணன், ஒடக்கோன், முட்டதுத் திருமாறன் ஆண்டகாலம்.
கி.மு. 5000 உலக மக்கள் தொகை 5 மில்லியன். சிந்து சமவெளி நாகரிகம் தொடக்கம். முகஞ்சதாரோ, அரப்பா.
கி.மு. 4000 சிந்து சமவெளி மக்கட் தொகை 1 மில்லியன்.
கி.மு - 4000 கிருத்துவ உலக நாட்குறிப்பு ஆரம்பம்.சுமேரியாவில் புதைபொருளாராய்ச்சி சிந்து சமவெளி வணிகப் பொருள் கண்டது.
கி.மு - 3200 சிந்து சமவெளியினர் 27 விண்மீன்கள் இடைத்தொடர்பு நோக்கி சூரிய, சந்திரனின்முழு மறை வடிவங்கள் நிலைபபாடு கண்டனர். கி.மு - 3113 அமெரிக்க- தமிழினத்தவராகிய மாயர்கள் தொடங்கிய மாயன் ஆண்டுக் கணக்கு ஆரம்பம்.
கி.மு - 3102 சிந்து சமவெளிக் தமிழர்களின் "கலியாண்டு" ஆண்டு தொடக்கம், சிந்து சமவெளியில் தமிழர்களின் நாகரிகம் தழைத் தொடங்கியது. மண்டையோட்டு வடிவங்களின் வகைகள் இடமிருந்து வலம்: நெடுமண்டை நீள்வட்ட வடிவம்; இரண்டு குட்டைமண்டை வடிவங்கள்- நீளுருண்டை வடிவமும் ஆப்பு வடிவமும்; நடுமண்டை ஐங்கோண வடிவம்.

கி.மு - 3100 - 3000 ஆரியர்சுள் சித்து சமவெளி வழி நுழைந்தனர். துணி நெய்தல் ஐரோப்பா சிந்துசமவெளியில் ஆரம்பித்தது. தென்னிந்தியாவில் குதிரைகள் இருந்தது. சைவ ஆகமங்கள் முதல் தமிழ்ச் சங்க காலத்தில் பொறிக்கப்பட்டன.
கி.மு - 2600 எகிப்திய பிரமிடுகள் வேலை ஆரம்பம்.
கி.மு - 2387 இரண்டாம் கடல் கொந்தளிப்பால் கபாடபுரம் அழிந்தது. ஈழம் பெருநிலப் பகுதியிலிருந்து பிரிந்தது.
கி.மு - 2000 - 1000 காந்தாரத்தில் இருந்த ஆரியர்களுடன் வடபுலத் தமிழ்மன்னர்களும் சிந்து வெளி தமிழர்களும் போர் புரிந்த காலம். கடற்பயணங்களில் புதியன கண்டுபிடித்த சேர இளவரசர்கள் ஈழத்தில் ஆண்டகாலம். கங்கைவெளி - சிபி மரபினர் ஆட்சி. சிந்து வெளி - சம்பரன் ஆட்சி.
கி.மு - 1915 திருப்புரங்குன்றத்தில் மூன்றாம் தமிழ்ச் சங்கம் நடந்தது.
கி.மு. - 1900 வேத கால முடிவு. சரசுவதி ஆறு வற்றியதினால் மக்கள் தொகை கங்கை ஆறு நோக்கி நகர்ந்தது.
கி.மு. 1500 முக்காலத்து பிராமி மொழி வழக்கத்தில் இருந்த துவாரக நகர் வெள்ளத்தில் மூழ்கியது. இரும்பின் உபயோகம். கிராம்பு சேர நாட்டிலிருத்து மத்திய கிழக்கு நாடுகளுக்குஏற்றுமதி செய்யப்பட்டது.
கி.மு. - 1450 உபநிசத்துக்களும் வேதங்களும் உண்டாக்கப்பட்டன.
கி.மு. - 1316 மகாபாரத கதை வியாசரால் அமைக்கப் பட்டது.
கி. மு. 1250 மோசசு 600,000 யூதர்களை எகிப்திலிருந்து வெளியேற்றினர்.
கி. மு . 1200 ஓமரின் இல்லயாய்டு, ஓடசி பாடல்கள் மேற்கோற்படி கிரேக்க துரோசன் சண்டை.
கி. மு. 1000 உலக மக்கள் தொகை 50 மில்லியன்.
கி. மு. 1000-600 வடக்கில் சிபி மரபினர், தெற்கில் திங்கள் மரபினர் ஆட்சி நிலவியது.
கி. மு. 950 அரசன் சாலமன் வர்த்தகக் கப்பலில் யூதர்கள் இக்காலத்து கூறப்படும் இந்தியா வருகை.
கி. மு. 950 வடமொழி முழு வளர்ச்சியடையாது பேச்சு மொழி உருவெடுத்தக் காலம்.
கி. மு. 925 யூதர்களின் அரசன் தாவிது இப்போதைய இசுரேல், லெபனானை பேரரசாகக் கொண்டிருந்தான்.

கி. மு. 900 இப்போதைய இந்தியாவில் இரும்பின் உபயோகம்.
கி. மு. 850பின் இபபோதைய இந்தியாவின் பொதுவான மொழி தமிழ், வடமொழி, (வடதமிழ், தென்தமிழ்) என மொழிகள் உருவாயின. வடபுலத்தில் பிராமி எனவும் தென்புலத்தில் தமிழி எனவும் பெயர்பெற்றன. பிராமிக்கும், தமிழுக்கும் எழுத்திலக்கண ஒற்றுமை உண்டு. வடமொழி பாகதமாகவும், தென்மொழி தமிழாகவும் பெயற்பெற்றன. (சமசுகிருதம் வடமொழி அல்ல. காரணம் அது போதுமான வளர்ச்சி அடைந்திருக்கவில்லை.) தொல்காப்பியம்- பிராகிருதப் பிரகாசா இலக்கண நூற்கள் எழுதப்பட்டன, கடைச் சங்க காலத்தில் நற்றினை, குறுந்தொகை, அகநாணூறு, புறநாணூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், பத்துபாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை, மருதக்காஞ்சி, முல்லைப்பட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, நெடுநல்வாடை, முதலிய நூல்கள் தோன்றின. திருக்குறள் தலையாய நூல், பின்னர் சங்க கால முடிவுக்குப் பின் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி முதலிய ஐம்பெரும்காப்பியங்களும், முதுமொழிக்காஞ்சி, களவழி நாற்பது, கார்நாற்பது, நாலடியார் திரிகடுகம், நான்மணிக்கடிகை, சிறுபஞ்ச மூலம், ஏலாதி, ஆசாரக்கோவை, பழமொழி நாணூறு, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முத்தொள்ளாயிரம் முதலிய நூல்களும் தோன்றின.
கி. மு. 776 கிரேக்கத்தில் (கிரிசு) முதல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி. குழந்தைகள் குகையில் கண்டு எடுக்கப்பட்ட மண்டையோடு. மென்டோனா, இத்தாலி. பித்திக்காந்திரோப் பஸ் 1 யின் மண்டையோடு. (தூபுவா 1891ல் கண்டு எடுத்தது) சீனாந்திரோப்பஸின் மண்டையோடு (மீட்டமைப்பு: கெராஸிமவ்)
கி. மு. 750 பிராகிருத மொழி மக்கள் மொழியாக ஆரம்பித்தது.
கி. மு. 700 சொரோசுடிரேணியிசம் பெர்சியாவில் சொரோசுடரால் துவக்கப்பட்டது, இவருடைய மதப்புத்தகம் செண்டு அவெசுடா.
கி. மு. 623- 543 கெளதம புத்தர் காலம், தற்போதைய உத்திரப்பிரதேசத்தில் பிறந்தார்.
கி. மு. 600 லாவோ - துசு காலம். துவோசிசம் சைனாவில் புழக்கம், எளிமை, தன்னலமின்மை சீனர்கள் வாழ்வானது.
கி. மு. 600
கோதடிபுத்தர் அறிந்த மொழிகளில் தமிழும் ஒன்று,
கி.மு. நான்கு, ஐந்து, ஆறாம், நூற்றாண்டுகளில் குறிப்பிடத்தக்க மன்னர்கள் இளைஞன் கரிகாற்சோழன், பெருஞ்சோற்று உதயஞ்சேரலாதன். பழந்தமிழ் இசைக்கருவிகள் வடநாடு முழுவதும் வழக்கில் இருந்தன. (தோற்கருவிகள்) தமிழிலக்கணத்தைப் பின்பற்றி சமசுகிருதத்திலும் எழுத முயற்சி மேற்கொள்ளபட்டது. புணர்ச்சி இலக்கணம் சமசுகிருதத்தில் திணிக்கப்பட்டுள்ளது.
கி. மு. 599 - 527 மகவீரர் காலம். செயின மதம் தோற்றம் உயிர்த்துண்பம் தவிர்த்தல் இவரின் பெருங்கருத்து.
கி. மு. 560 பித்தகோரசு கிரேகத்தில் (கீரிசு) கணிதம், இசைக் கற்றுக் கொடுத்தக் காலம். மரக்கறி உண்ணல், யோகாசனம், ஓவியம் தமிழ் நாட்டில் கற்பிக்கப்பட்டன.
கி. மு. 551-478 கன்பூசியசு காலம். சீனர்களின் கல்விக்கு அடிப்படையே இவருடைய சமுதாய கல்வி, மக்களின் வாழ்முறை, மதம் யாவும்.
கி. மு. 500 கரிகாற் சோழன் காலம். உலக மக்கள் தொகை 100 மில்லியன். இப்போதைய இந்திய மக்கள் தொகை 25 மில்லியன்.
கி. மு. 478 இளவரசன் விசயா 700 துணையாளர்களுடன் இலங்கையில் சிங்கள அரசு ஏற்படுத்தல். கி. மு. 450 ஏதேன்சில் சாக்கரடீசு புகழோடு இருந்த காலம்.
கி. மு. 428 - 348 சாக்கரடீசு மாணவர் புளுட்டோவின் காலம்.
கி. மு. 400 கிரேக்கத்தில் மருத்துவமேதை இப்போகிரட்டீசின் காலம். பனினி வடமொழி இலக்கணம் அமைத்தார்.
கி. மு. 350 - 328 உதயஞ் சேரலாதன் காலம் (செங்குட்டுவன் நெடுஞ்சேரலாதன்)
கி. மு. 328 - 270 மகன் இமயவரம்பன் - நெடுஞ்சேரலாதன் ( ஆரியரை வென்றவன் - கிரேக்க யவனரை அடக்கியவன்)
கி. மு. 326 அலெக்சாண்டர் சிந்துப் பிரதேசத்தின் மீது படையெடுப்பு. வெற்றி அமையவில்லை.
கி. மு. 305 சந்திரகுப்த மெளரியரின் அட்சிக்காலம். கிரேக்க பேரரசு அமைத்த செலுக்கசை தோற்க்கடித்தவர்.
கி. மு. 302 சந்திரகுப்தரின் அமைச்சர் கெளடில்யர் அர்த்தசாத்திரம் எழுதல்.
கி. மு. 300 சீனர்கள் வார்த்த இரும்பு கண்டுபிடித்தல்.
கி. மு. 300
கல்வெட்டுகளில் சோழ, பான்டிய, சத்தியபுத்திர, சேர அரசுகள் இருந்தன.
கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வரை தமிழ், பிராகிருதம் இரண்டும் எழுத்து மொழியாகவும் பேச்சு மொழியாகவும் விளங்கின. பிராகிருதம் - மக்களின் மொழி. நாணயங்களின் ஒரு பக்கம் தமிழ், மறுபக்கம் பிராகிருதம் என அமைந்திருந்தன.
கி.மு. 273-232 மெளரிய பேரரசர் அசோகர் காலம். தமிழ்நாடு தவிர மற்றவை இவர் வசம் இருந்தது. கலிங்க போர் இவரை புத்த மதத்திற்கு மாற வைத்தது. இவரது அசோக சக்கரம் இன்று இந்தியக் கொடியில் உள்ளது.
கி.மு. 270-245 சேரன் பல்யானை செல்கெழு குட்டுவன், சோழன் பெரும்பூண் சென்னி, பாண்டியன் ஒல்லையூர் பூதப் பாண்டியன், ஆகியோரின் காலம்.
கி.மு. 251 புத்த மதம் பரப்ப அசோகர் தன் மகனை இலங்கைக்கு அனுப்பினார்
கி.மு. 245-220 சேரன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் காலம்.
கி.மு. 221 புகழ் வாய்ந்த சைனாவில் 2600 கல் நீளமுள்ள பெரும் சுவர் கட்டப்பட்டது.
கி.மு. 220 - 200 கரிகாற்சோழனுக்கும் பெருஞ் சேரலாதனுக்கும் போர்.
கி.மு. 220-180 குடக்கோ நெடுஞ்சேரலாதன் ஆட்சி. உறையூர்ச் சோழன் தித்தன், ஆட்டணத்தி, ஆதிமந்தி, ஆகியோர் வாழ்ந்த காலம்.
கி.மு. 200 முனிவர் திருமூலர் காலம். 3047 சைவ ஆகமங்களின் தொகுப்பான திருமந்திரம் எழுதினார்.
கி.மு. 200 தமிழ்நாட்டில் பதஞ்சலி முனிவர் யோக சூத்திரங்கள் எழுதினார். 18 சித்தர்களில் ஒருவரான போகர் முனிவர் பழனி முருகன் கோவிலை ஏற்படுத்தினார்.
கி.மு. 125-87 ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் காலம்.
கி.மு. 87-62 செல்வக் கடுங்கோ வாழியாதன் ஆட்சி. பாரி, ஒரி, காரி, கிள்ளி, நள்ளி முதலிய குறுநில மன்னர்கள் ஆட்சி
கி.மு. 62-42 யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஆட்சி, சேரமான் மாரி வெண்கோ தொண்டியில் ஆட்சி. இக்காலத்தில் வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், மாங்குடி மருதனார் கல்லாடனார்.(கல்லாடம்)
கி.மு. 42-25 பெருஞ்சேரலிரும்பொறை ஆட்சி, சேரமான் மாரிவென்கோ இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, கானபெரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி ஒற்றுமையாய் இருந்தார்கள். இவர்களை இன்றே போல்கநும்புணர்ச்சி என ஒளவை பாராட்டினார், மோசிக்கீரனார், பொன்முடியார் கொண்கானங்கிழான் நன்னன், கரும்பனூர்கிழன், நாஞ்சில் வள்ளுவன் குறிப்பிடத்தக்கவர்கள்.
கி.மு. 31 உலகப் பொது மறையாம் தமிழனின் நன்கொடையாம் திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் பிறந்த ஆண்டு.
கி.மு. 25-9 இளஞ்சேரல் இரும்பொறை ஆட்சி. பாண்டியன் பழையன் மாறன். கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார், பொத்தியார், புல்வற்றூர் ஏயிற்றியனார் ஆகியோரின் காலம்.
கி.மு. 9-1 கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை, பாண்டியன் கீரன் சாத்தன் வாழ்ந்த காலம்.
கி.மு. 4 ஏசுநாதர் - கிருத்துவர் மதம் கண்டவர் பெத்தலயேமில் பிறந்தார். எனவேதான் கல்தோண்றி மண்தோண்றாக் காலத்தே தோண்றிய மூத்தகுடி தமிழ்க்குடி என்ற சொல்லடை வழக்கத்தில் வந்திருக்க வேண்டும்.