திங்கள், 7 ஜூலை, 2014

தாளவாடியில் இலவச கண் சிகிச்சை முகாம்-2014ல் 2

மரியாதைக்குரியவர்களே,
            வணக்கம். தேசிய கண்ணொளி விழிப்புணர்வு இயக்கம் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
                    வருகிற 21-ஜூலை -2014 திங்கள் கிழமை அன்று தேசிய கண்ணொளி விழிப்புணர்வு இயக்கத்தை துவக்கி வைத்தவுடன் முதல் கண் சிகிச்சை முகாம் வருகிற 2014 ஆகஸ்டு மாதம் 2ஆம் தேதி சனிக்கிழமை அன்று நம்ம தாளவாடியில் காலை 8-00 மணி முதல் மதியம் 1-00 மணி வரை இலவச கண் சிகிச்சை முகாம் ஈரோடு மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம்,குன்னூர் மேட்டுப்பாளையம் இம்மானுவேல் கண் நோய் நிவாரணக்குழு,தேசிய கண்ணொளி விழிப்புணர்வு இயக்கம்  இணைந்து இலவச சிகிச்சை நடத்த உள்ளது.சத்தி நகர அரிமா சங்கமும் இணைந்து கொள்ள சம்மதம் கொடுத்து உள்ளனர்.
            மக்களிடையே நன்கு விளம்பரம் செய்து கொடுத்து கடந்த முறை தவற விட்டவர்களை இந்தமுறை வரவழைத்து பயன்பெற செய்வது நமது பொறுப்பு .
               கடந்த 31.5.2014 சனிக்கிழமை தாளவாடி அஸிசி ஆஸ்பத்திரியில் நடந்த கண் சிகிச்சை முகாமில் சிகிச்சை பெற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள் மீண்டும் பரிசோதனை செய்துகொள்ளலாம்.அதோடு கண் சிகிச்சை பெறாத தேவையுள்ள மக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு இலவச கண் சிகிச்சை பெற்று பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.மறவாதீங்க.இது இரண்டாவது சிகிச்சை முகாம் இலவசத்தை பயன்படுத்துங்க,பயனடையுங்க....என சமூக நலப்பணியில் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக